மனமே மேம்படு
நேற்று நாள் கழிக்காமல்
இன்று நாள் உதிக்காது...
இலையுதிர் காலம் தொலையாமல்
வசந்தகாலம் முந்தியே பிறக்காது...
சிட்டுக்குருவி ஆயினும்
சின்ன குயிலே ஆயினும்
சிறகை பிரிக்காமல்
வானில் வட்டமிடாது...
வலிகளும் தோல்வியும்
வழித் தடங்கள்
மெருகு ஏற்றும்
அழகு சாதனங்கள்
நிரந்திரம் ஆகாது...
மனமே...நீ மேம்படு