அவளும் நானும்

அமிழ்தம் அருந்திடவே அவள் இதழ் உறைவிடமே...
அவள் விழிகள் அழைத்திடவே...
என்னுயிர் பிழைத்திடுமே!

நந்தவன தென்றலடி
நீ எனக்கு
அதில் கரைந்து வரும் வாசமடி
நான் உனக்கு...

கொட்டும் மழையடி
நீ எனக்கு
அது வந்து சேரும் நிலமடி
நான் உனக்கு...

காணும் தெய்வமடி
நீ எனக்கு
அவர் அருளும் பக்தியடி
நான் உனக்கு...

ஆகாயத் தாமரையடி
நீ எனக்கு
உலாவரும் வானமடி
நான் உனக்கு...

கோடை வெயில் தாக்கமடி
நீ எனக்கு
நிழல் தரும் மரமடி
நான் உனக்கு...

நடக்கும் கால்களடி
நீ எனக்கு
அது போகும் பாதையடி
நான் உனக்கு...

எழுதும் பேனாவடி
நீ எனக்கு
அதில் ஊற்றி விடும் மையடி
நான் உனக்கு...

உடல் தாங்கும் உதிரமடி
நீ எனக்கு
அதில் நனைந்து வரும் நிறமடி
நான் உனக்கு...

கண்கவரும் ஓவியமடி
நீ எனக்கு
அதில் மின்னும் வண்ணமடி
நான் உனக்கு...

அழியா காவியமடி
நீ எனக்கு
தாங்கி நிற்கும் காதலடி
நான் உனக்கு...

உள் வாங்கும் சுவாசமடி
நீ எனக்கு
இயங்கும் உயிர் துடிப்படி
நான் உனக்கு...

ஊதும் புல்லாங்குழலடி
நீ எனக்கு
அது தரும் மயக்கும் இசையடி
நான் உனக்கு...

ஏற்றும் தீபமடி
நீ எனக்கு
அதில் ஏறி வரும் ஒளியடி
நான் உனக்கு...

தாவி வரும் மழைலையடி
நீ எனக்கு
கட்டி தரும் முத்தமடி
நான் உனக்கு...

கருத்தான கவிதையடி
நீ எனக்கு
கற்று புரிந்த மொழியடி
நான் உனக்கு...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (25-Mar-19, 4:25 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 1683

மேலே