ஒரு கவிதை பிறந்தது

வெண்பா பாடும் குயிலோ
பெண்பால் காளை இவளோ...
மார்பில் முட்டி
நெஞ்சில் கிழித்து
போகிறாள் அவளோ...

கண்ணுக்குள் சோழி
சுழல விட்டு
மண்ணில் என்னை
சுழற்ற விட்டாள் இவளோ...

ஆத்தோரம் சேலை கட்டி
ஆலோலம் மெட்டு கட்டி
பறக்காத பறவை அவள்
என் சிறகை விரித்து சென்றாளோ...

இடுக்கி இடையில் இழுத்து
இடைஞ்சல் செய்ய
இங்கும் ஒரு கவிதை
பிரசவம் பார்த்து போனாளோ...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (2-Apr-19, 8:37 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 2168

மேலே