தொடர்கதையாய்

வேலைக்காக
வெளிநாடு சென்றவர்களின் கதைகள்,
அடுத்தடுத்து வரும்
அலைகளைவிட அதிகம்தான்..

ஆனாலும்
அவளும் சொல்கிறாள் தன்கதையை,
தூதாகிட வேண்டுமாம்
கடலலைகள்..

கேட்டுக்கொண்ட கடலும்
தலையசைத்துவிட்டு அவளுக்கு,
திரும்பிச் செல்கிறது
துயரத்துடன்..

தொடர்கதையான
தொடரும் கதைகள்,
துடைத்துக்கொண்டது கண்ணீரை
அலைகளில்..

அதனால்தன்
ஆனதோ கடல்நீர்-
உப்பாக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Apr-19, 7:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thodarkathaiyaai
பார்வை : 99

மேலே