கைம்பெண் கண்ணீர்
காற்றின் காம விரல்கள்
என் இரவின் கற்பை சூறையாட
ஒப்பனையுடன் ஓடோடி வர ...
துணையில்லா என் இரவு இரங்கல் பா பாட
துயரத்தின் தூரிகையை தூக்கிப் பிடிக்கிறது...
கடும்பசியில் உடல் வாட
உள்ளமோ உன்னையே தேட ..
வாராயோ தேவலோகம் சென்ற என் தேவனே ?!