கவி பேசும் கண்கள்
இரு எதிர் அணுக்கள் மோதி கொள்கையிலே
பிறக்கும் மின்சாரம் போல்....
உன் காந்த கருவிழி அசைகையிலே
என் உடல் அணுக்களை உருக்குலைய செய்யுதடி....
உன் இதழ் மலர்ந்து நீ பேசாமல் சென்றாலும்
உன் இருவிழிகள் என்னை தாக்கி செல்கையிலே
என் அடிமனமும் கொஞ்சம் ஆடி போகுதடி....
உன் மலர்விழி என்னை நோக்கி மலர்கையிலே
என்னுள் பல இசைமழை தோன்றுதடி
உன் மீன்விழி மௌன கவி பேசுகையிலே
என் உள்ளம் உன்னை தேடி அலைத்தடி
உன் மான்விழி என்னை சீண்டுகையிலே
மறுபிறவியிலும் உன்னையே சேர்ந்திடவே
மீண்டும் பிறக்க தோன்றுதடி.....