வாழ்க்கை
வாழ்க்கை !
கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்
மனிதர்களே ....
பல வண்ணங்கள்
வேண்டுமெனில்
பட்டாம்பூச்சியிடம்
கேட்டுப் பெறுங்கள்
பச்சோந்தியிடம்
கேட்காதீர்கள்!
மனிதர்கள் அழுவதே
வாழ்க்கை இல்லை
மனிதன் அழாமல்
இருந்தாலும்
வாழ்க்கை இல்லை !
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை