காதல்
அவளை நான் பார்த்ததோ உண்மை
அவள் பார்வை என் மீது பட்டதும் உண்மை
அவள் என் நெஞ்சில் நிறைந்திருப்பதும் உண்மை
ஆனால் பார்வை தந்த அவள் மீண்டும் வராததேனோ
பார்வைக்கு அர்த்தம் தந்திட .
துடி துடிக்குதே என் நெஞ்சம்
அவளைக் காண இதை அறிவாளோ அவள்
எனைக்காண வருவாளோ
இல்லை காலமெல்லாம் காதல் வலி
சுமக்க வைத்து வாராது இருப்பாளோ