நீ
கூரிய விழியால்
ஆயுதம் தொடுப்பாய்
குழந்தை சிரிப்பினில்
இதயம் உடைப்பாய்
ஓர பார்வையில்
உயிரினை இழுப்பாய்
இமைகளை அசைத்து
இலக்கியம் படைப்பாய்
உதடுகளை பூட்டி
மௌனத்தை வளர்ப்பாய்
கொலுசொலி வழியே
கதைகள் படிப்பாய்
நெற்றி பொட்டில்
விண்மீன் மறைப்பாய்
கனவுகள் முழுக்க
கட்டி அணைப்பாய்
கனவுகள் முடிந்தும்
கானலாய் கலைவாய்
தொடர்கதை போலே
இனிதே தொடர்வாய்
என்னுள் கலந்த
என்னவள்
நீ . . . . .