தன்னையே நம்புவது

ஓஸோன் படலத்தில்
ஓட்டை விழுந்தாலும்
ஓடி ஒழியாம
உயிர்களைக் காத்திடும்
இயற்கை போல

உயிரை எடுக்கின்ற—கடும்
துயர் வந்தாலும்
உள்ளம் கலங்காத
உயர் நிலை தான்
தன்னம்பிக்கை

மண்ணிலுள்ள மாந்தருக்கு
மூன்று கைகள்
முதன்மையான கை
தன்னம்பிக்கை—முழுதும்
தன்னையே நம்புவது

எழுதியவர் : கோ. கணபதி. (12-May-19, 9:05 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே