மூச்சு
எங்கிருந்து வருகிறது
எங்கே செல்கிறது
இங்கிருந்தால் அறிந்திடவே
முடியாதா என்றோர் அவா...
என்னைப் போல் முன்னையரும்
இனி வரும் பின்னையரும்
எண்ணியெண்ணி நொந்திருப்பர்..
உயிர்வந்து உடல் வந்ததா
இல்லை உடலுக்குள் உயிர் சென்றதா
ஒன்பது வழியிருந்தும் போகாமல் இருக்கும் அது
மெல்லென பறப்பது தான் எவ்வழியோ யாரறிவார்