தெய்வேந்திரம் ஈஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தெய்வேந்திரம் ஈஸ்வரன்
இடம்:  அச்சுவேலி தெற்கு அச்சுவே
பிறந்த தேதி :  05-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2012
பார்த்தவர்கள்:  237
புள்ளி:  27

என்னைப் பற்றி...

ஆசிரியா்
புனித தெரேசாள் மகளிர் கல்லூரி
அச்சுவேலி

என் படைப்புகள்
தெய்வேந்திரம் ஈஸ்வரன் செய்திகள்
தெய்வேந்திரம் ஈஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2023 5:35 pm

வாழ்க்கை என்னும் பாதையில்
நாம் முன்னோக்கிச் செல்கையில்
பல படிகளைத் தாண்ட நேரிடுகிறது...
ஆனால்...
துரதிஸ்டம் என்னவென்றால்
படிகள் எல்லாமே
ஒரே அளவினதாய் அமைந்து விடுவதில்லை...
சில படிகள் அடி எடுத்து வைக்கும் தூரத்திலும்
சிலதோ.... கைக்கெட்டும் தூரத்திலும்
இருக்கின்ற போதிலும்
சில படிகள்
கண்ணுக்கெட்டாத் தூரத்திலும் அமைந்துவிடுகின்றன...

அந்நேரம்
படிகளை எண்ணி
மாற்று வழி தேடி நடக்கையிலே
நம் வாழ்வும் முடிந்து விடுகின்றதே...

மேலும்

தெய்வேந்திரம் ஈஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2023 7:01 pm

எல்லாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது – ஆனால்
நாங்கள் மட்டும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்…
நோய் நொடி துன்பமென்று எதுவந்த போதும் – உலகம்
சுற்றும் வேகத்தைக் குறைக்கவில்லை
மனிதரும் அதே வேகத்தை மறக்கவில்லை – ஏனோ
நாங்கள் மட்டும் இன்னும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்....

எழுவதற்கு சக்தியில்லை என்றெண்ணி
அழுது கிடக்கின்றோமோ
இல்லை
எழுந்து எழுந்து விழுவதால் இனி
எழவே வேண்டாம் என்று நினைத்தோமோ...
எதுவென்று தெரியவில்லை– ஏனோ
நாங்கள் மட்டும் இன்னும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்....

மேலும்

தெய்வேந்திரம் ஈஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2023 10:43 pm

எனக்கும் ஓர் ஆசையுண்டு
பாரதிபோல் பாவெழுத

அதற்கோர் தடையென்றால்
என்னுள்ளே எழுந்தயக்கம்

இதற்கேன் வீண்பொழுது
உனக்கேன் வீண்வேலை

கிடக்கே பலசோலி
அடபோடா படுபோய்நீ

என்றென் உளம் சொல்ல
உணர்வும் தான் தள்ள

நன்றே எடுத்த தாளை
மடித்தே மூடிவைத்து

என்றும் போல் இன்றும் நான்
எழுதாமல் விட்டுவிட்டேன்...

இல்லை இல்லையில்லை

எழுதித் தொலைக்கின்றேன்... – இதை
எழுதித் தொலைத்துவிட்டேன்

மேலும்

தெய்வேந்திரம் ஈஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2020 8:53 pm

விழி சொரிந்த நீரெடுத்து
எழுதிடத்தான் வழி இருந்தால்
கவி வடித்துக் காகிதத்தில்
கொட்டி யதைத் தீர்த்திருந்தால்
காவியமோ ஓவியமோ
நிச்சயமாய் ஆயிருக்கும்...

விழி வழியும் நீரெடுத்து
வரைவதற்கு வழியுமில்லை - அந்நேரம்
கவி வடிக்கக் கைகளிலே
காகிதமோ ஏதுமில்லை - மனதிலே
எழுதி வைத்த சில வரியும்
என்னிடமோ கூட இல்லை
வலிகொடுத்த சம்பவங்கள்
என் மனதில் பதியவில்லை...

இதை எடுத்துச் சொல்லிவிட
என்மனதில் கோடி ஆசை - ஏனோ
அருகிருந்து கேட்டிடவும்
ஆவலோடு யாருமில்லை...

பொருள் பதிந்த வினாத் தொடுத்தால்
பகிர்வதற்குக் கோடியுள்ளம் - இங்கே
விலையில்லா என் வலியைக்
கேட்பவர்க்கு என்ன லாபம்...

மேலும்

கரைபுரண்டு ஓடிக்
களைப்படைந்து வெள்ளம்
நிலைமறந்து தூங்கும்
நிலையதுபோல் வாழ்க்கை

சிலையதுவம் கூட
சில நொடிகள் பதைக்கும்
இலையுதிர்த்த மரமும்
இவன் கதையில் துடிக்கும்

விலைகொடுத்து வாங்கி
விடலாமோ வாழ்வை
அதை இழந்த பின்னே
இனி எதற்கு வேட்கை...

மேலும்

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அன்பரே! 21-Feb-2020 7:32 am
.........இலையுதிர்த்த மரமும் இவன் கதையில் துடிக்கும்.... மனதைத் தொடும் வரிகள். பின்னி விட்டீர்கள் கவிஞரே , வாழ்த்துக்கள் 20-Feb-2020 11:12 pm
தெய்வேந்திரம் ஈஸ்வரன் - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 2:15 am

SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

PERCY PAL : தோசை வேணும்.

SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?

PERCY PAL : வெங்காய தோசை.

SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?

PERCY PAL : சின்ன வெங்காயம்.

SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?

PERCY PAL : நாட்டு வெங்காயம்.

SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?

PERCY PAL : சின்னதா நறுக்குனது.

SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

PERCY PAL : அதிகமா.

SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?

PERCY PAL : அறுத்துட்டே போடு.

SERVER : சிவப்பு வெங்கா

மேலும்

ரசித்து கருத்து பதிதத்தமைக்கு நன்றிகள் தோழமையே! நட்புடன் குமரி 17-Nov-2016 6:02 pm
சூப்பர்................. 17-Nov-2016 2:01 pm
ஆமாம் கவிஞரே! ஆனால் அது எல்லோராலும் முடிவதில்லை. கருத்துடன் தேர்விட்டு பகிர்ந்தமைக்கு நன்றிகள்! நட்புநாடும் குமரி 14-Nov-2016 1:14 pm
ரசித்ததுடன் கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழமையே! நானும் உங்க பதிவுகளை ரசிப்பதுண்டு! நட்புடன் குமரி 14-Nov-2016 1:08 pm

........................................................................................................................................................

“ ஒரு வான்கோழி வாங்கிட்டு வரலாண்டா.. ” நச்சரித்த சோமுவுடன் கடைத்தெரு போனான் பாலு. நாலைந்து கடைகள் ஏறி இறங்கியும் வான்கோழி கிடைக்கவில்லை.

“ சே..! திருவண்ணாமலை பின் தங்கிய மாவட்டம்கிறது சரியா இருக்கு..! ” சலித்துக் கொண்டான் சோமு.

அப்படி பின் தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலையை ஒரே முட்டில் ஒதுக்கி விட முடியாது என்பது போல வேலையத்த ஒரு ஜெர்மன்காரன் ஷாட்ஸ் மட்டும் அணிந்து, நெற்றி நிறைய திருநீறு பூசி, பறவைகளை விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் வா

மேலும்

தங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. 24-Jan-2016 5:40 pm
அருமை வான்கோழன் ??? தொடரட்டும் நன்றி 23-Jan-2016 11:53 pm
:) உங்களுக்கும் :) 30-Dec-2015 6:22 pm
அப்பா..! எவ்ளோ பெரீய்ய கமெண்ட். ;) ;) புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 30-Dec-2015 6:02 pm
தெய்வேந்திரம் ஈஸ்வரன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2014 7:59 am

களிமண்ணில் பிடித்து வைத்து
>>>>>கடவுளென்று கும்பிடுவார் !
கருவில் சுமந்து வளர்த்தவளை
>>>>>நிர்கதியாய் விட்டிடுவார் ...!!

பிடித்த நடிகர் கட்அவுட்டுக்கு
>>>>>பாலபிஷேகம் பண்ணிடுவார் !
பசியால் குழந்தை அழுதாலும்
>>>>>பாராமுகமாய் சென்றிடுவார் ...!!

மதுவிலக்கு பற்றி மேடையிலே
>>>>>வாய்கிழியப் பேசிடுவார் !
மாலைப்பொழுது கழிந்து விட்டால்
>>>>>மதுகுடித்து சரிந்திடுவார் ...!!

அன்னை மொழிக்கீ டில்லையென
>>>>>அழுத்தமாகச் சொல்லிடுவார் !
ஆங்கில வழிப் பள்ளியிலே
>>>>>அவர்பிள்ளை படித்திடுவார் ...!!

லஞ்சம் பெறுவது குற்றமென
>>>>>லட்சியத்துடன் முழங்கிடுவார் !
லட்சங்கள் வாரிக்கொடுத்து

மேலும்

வாழ்த்துக்கள் 24-Apr-2015 12:39 pm
மிக்க நன்றி சஹானா !! 23-Apr-2014 11:30 am
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !! 23-Apr-2014 11:30 am
முக மூடிகளை அழகா கிழிச்சு எழுதியிருக்கிரீங்க! 23-Apr-2014 8:30 am
தெய்வேந்திரம் ஈஸ்வரன் - முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
தீனா

தீனா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே