அன்னை

இவ்வுலகரிய பத்தாய் பாடுபட்டு
உயிர்வழியேந்தி ஈன்றா யெனை !
அன்பாலரவனைத்து காத்தாய் தாயே
பிறர்நொந்தால் வெந்தாய் நீயே !
ஆலயம் தொழமாட்டேன் யெனைக்
காக்கு மரணாயென்றும் நீயே !
கனப்பொழுதும் தன்னல. மறந்து
குடில்நலம் பேணிக் காப்பாள் !
என்னணுவும் உனைப் பற்றியதால்
ஏனோ உனக்கொன் றென்றால்
என்னுயிர் நொகுமென் தாயேயுனை
நினையாப் பொழுதன்றி மறவேன் !
உன்னுயிரில் தோன்றிய யானோ
உனை யெண்ணிப் போற்ற
இவ்வெழுப் பிறவியே யன்றி
இந்நாள்ப் பொழுதுக் கானுமோ !
எனினுமென் உடன்பிறப்பு வழியில்
எங்களை இன்றும் என்றும்
அரணாய் காக்குமென் அன்னைக்கு
" இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள் !
-தாயீன்ற சேயில் ஒன்றாய் :
மா-சங்கர்