பூமி புலப்படும்

சுவேதா...
விசா எடுத்தாள்... விமானம் பயணித்தாள்..
விடுதி தங்கினாள்.. கண்டம் விட்டு
கண்டம் சென்று கல்லூரி படித்தாள்..
பல்கலைக் கழக பாடங்கள் கேட்டாள்...

புத்தகங்கள் இணையத் தளங்கள் நுழைந்து
திளைத்தாள்.. எது நிமித்தம் அமெரிக்கா
சென்றாளோ அது நிமித்தம் சாதித்தாள்
சுவேதா... பிரேமின் அன்பு மகள்...

இனி இந்த ஓருலகு பத்தாது
நீ வெல்வதற்கு.. வானமும் வசப்படும்..
வசந்தமும் உன் வழியாகும்... வாழ்த்துக்கள்
பெண்ணே.. பிரேமின் கண்ணே சுவேதா...

இனி ஆகாயம் பறக்கும் போது
மட்டுமல்ல தரையில் நின்றாலும் உனக்கு
பூமி புலப்படும்.. உலகம் வசப்படும்...
ஒட்டுமொத்த உலகம் உன்னாலும் உயரும்...

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்ற
பாரதியின் எதிர்பார்ப்பையும் மிஞ்சினாய் நீ!

உனக்கென ஒரு உலகம் இங்கு...
இனிமையாய்க் காத்திருக்கிறது... கற்ற அறிவு
கணினி அறிவு கொண்டு (நீ) அரசாள்வதற்கு...
சுவேதா செல்லத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
👍👏💐💪😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-May-19, 10:58 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : poomi pulappadum
பார்வை : 219

மேலே