முத்துப் புன்னகை புரியுங்களேன்
மூடிக் கிடந்தால் 
பூக்களுக்கு அழகில்லை !
முகத்தில் புன்னகையை மூடி வைத்தால் 
பெண்களுக்கு அழகில்லை !
(பாட்டிகளும் included )
உறையிலிட்டு ராகம் பாடும் வீணையை 
மூடி வைத்தால் வீணைக்கு அழகோ ?
முத்துக்களை திறந்து வைத்தால் அழகு 
சிப்பியில் மூடிக் கிடந்தால் அழகோ ?
ஆதலால் 
முத்துப் புன்னகை புரியுங்களேன் 
மோகன ராகங்களை வீணையில் வாசியுங்களேன் 
மூடிக் கிடக்கும் மலர்களே மலர்ந்து சிரியுங்களேன் 
நான் கவிதைப் புத்தகத்தைத்  திறந்திட  ஒரு சிறு வாய்ப்பளியுங்களேன் !
 
                    
