காலம்பூரா காதலித்தேன்

காற்றிலும் சுத்தமில்லை
காதலிலும் சுத்தமில்லை
காத்திருந்து காத்திருந்து
கண்ட பலன் ஒன்றுமில்லை

காலம்பூரா காதலித்தேன்
கண்டபடி காதல் கொண்டேன்
கொண்டாடி கூத்தாடியே
குதுகலமாய் வானில் பறந்தேன்

நினைத்த செயல் செய்யவில்லை
நீர் ஆகரம் புசிக்கவில்லை
நீண்ட பாதையில் விழி வைத்து
நித்தம் நித்தம் காத்திருந்தேன்

நிமிர்ந்து நீ பார்க்கவில்லை
நிம்மதிக்கேணும் பேசவில்லை
நாடி வரும் எனை நீயும்
நாயாய்க் கூட மதிக்கவில்லை

வேணாண்டி இந்த நிலை
வெடிக்கின்றது எந்தன் இதயம்
விளையாட்டுத் தனத்திற்கேணும்
வெறுமையாய் சிரித்து விடு.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (10-Jun-19, 3:27 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 702

மேலே