மூன்றாம் பாலினம்
மனித உருவில் மட்டுமே இது உள்ளதோ?
சிந்திப்பதாலே தம்மை சிலாகிக்கின்றனரோ?
மரம் செடி கொடிகளில் இவ்வகையில்லை
மாற்றுப் பாலினத்திற்கும் பொருந்தா உருவம்
மாறுபட்ட திறன் இருந்தும் மங்கிய நிலையில்
மாண்புமிக்க பிறப்பாய் எண்ணி ஆசிர்வதித்தல்
குறைபாடு உள்ளதாய் கூறி சோம்பித்திரிந்தே
குழுவாய் சென்று பலர் பாலியல் தொழிலில்
கரம் கண் கால் குறைபாடு போல் தம்மையும் எண்ணி
கருணைக் காட்டக் கூறி காத்திருப்பது நியாயமோ?
சிறிய உறுப்பில் வீரியம் இல்லாததே இவ்வகை
பெரிய வகையில் பிறப்பை பிரிப்பது சரியோ?
--- நன்னாடன்.