என்னவளின் மரணம்

என் அருகில்
அன்பாய் இருந்தவள்!

என் வாழ்வை
அழகாய் வரைந்தவள்!

என் மனதில்
காதல் விதைத்தவள்!

என் உடம்பில்
உயிராய் இணைந்தவள்!

என் இதழில்
கவிதைகள் வடித்தவள்!

என் கனவில்
காமம் உரைத்தவள்!

எப்போதும்,
என்னோடு இருந்தவள்!
என்னுள் புதைந்தவள்!
எனக்காய் வாழ்ந்தவள்!

இப்போது
என் வரிகளில்
மட்டுமே வாழ்கிறாள்!

என்னை விட்டு பிரிந்து சென்றது
நீ தான் தவிர
உன் காதல் இல்லை!!!

காலமெல்லாம் காதலியாக
உன் இதயத்தில் இருப்பேன்..
உனக்காக மட்டுமே துடிப்பேன்
என்று கூறிய உள்ளமொன்று..
இன்று கல்லறையில்
உறங்கி கொண்டிருக்கிறது!

என் காதல் மலர்
உதிர்ந்து போனதினால்..
மண்ணோடு மண்ணாக
புதைந்து போனதினால்..
இனி மண்ணறையிலும்
பூக்கள் வாசம் வீசும்!!!

கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (2-Jul-19, 2:55 pm)
Tanglish : ennavalin maranam
பார்வை : 3717

மேலே