அத்தி வரதர்

கடல் அலைபோல் அலை அலையாய்
பெருகிவந்த ஏழை மக்கள் திரள்
அத்தி வராத பெருமாளே உன் தரிசனம்
தேடி வந்து திக்கு முக்காடிப்போய் நிற்க
எங்கிருந்தோ பெரிய பெரிய வாகனத்தில்
வந்திறங்கிய 'வீ .ஐ.பி' மக்களுக்கும்
பணத்தால் கொழுத்து 'வீ.ஐ.பி' ஆன
பலருக்கும், உன்னைத் தூற்றியே பழகிய
பல 'வே.ஐ.பி' க்கும் க்ஷண நேரத்தில்
தரிசனமும் தந்து, கூட பிரசாதமும் தந்து
அருளுவது ஏனோ , இந்த ஏழைக்கு புரியவில்லை ,
கலியுகத்தில் இதைக்கண்டு நீ கண்டுகொள்ளாது
இருப்பதும் ஏனோ , புரியவில்லையே , அத்தி வரதனே
இறைவன் கண்களுக்கு பாரபட்சம் இல்லை
என்று ஞானிகளும் முனிவரும் கூற
இந்த 'வீ.ஐ.பி' வர்கத்தை நீ கண்டுகொள்ளாது
ஏழைகளை மட்டும் ரட்சிக்கும் காலம் வருமோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jul-19, 9:46 am)
பார்வை : 79

மேலே