"நம்பிக்கை மீது நம்பிக்கை வை"

பின் தூங்கி முன் எழ.,
வேகம் கொள்...!

கற்றது போக மேலும் கற்க.,
தாகம் கொள்...!

சிறப்பான வேலையை தேர்வு செய்யாமல்,
செய்யும் வேலையை சிறப்பாக செய்...!

மோகம்,சோகம் உன்னை சூழ விடாமல்.,
முடங்கி விடாதே வெற்றியை தொடாமல்..!

முடிந்தவரை தோல்வியை சரிக்கட்டு.,
தோல்வி தான் வெற்றியின் படிக்கட்டு..!

நீ யார்? என தினமும் யோசித்துப்பார்.,
உன் எதிரியையும் நண்பன் என நேசித்துப்பார்..,

"உதவி" பெறாமல் கூட இருந்து விடு.,
உதவாமல் மட்டும் இருந்து விடாதே..,

பிறர்க்கு உதவாமல் இருப்பதை விட..,
இறப்பதே மேல்..!

வாழ்க்கையை ஆழ்ந்துப்பார்...,
உன் வாழ்க்கை முடிவதற்குள்ளாவது
பிறருக்காக வாழ்ந்துப்பார்...!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (7-Sep-11, 3:59 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 402

மேலே