காதல்
அது ஒரு காதல் கவிதைப்பூங்கா
அதில் பூத்துக் குலுங்கி நறுமணம்
பரப்பும் எத்தனையோ கவிதைப்பூக்கள்
இதையெல்லாம் பார்த்துவந்த நான்
அங்கு ஓர் மலர் மொட்டு என் மனதைப் பறிக்க
அதன் அருகில் சென்றேன் நீ யார் என்று கேட்டேன்
அது இதழ்கள் எல்லாம் விரிந்து
புன்னகைத்து 'என்னைத் தெரியலையா
அன்பே நான்தான் உன்னவள் உன்
காதலி செண்பகா என்றது பூத்த
புது கவிதையாய் அந்த காதல் பூங்காவில்.