கருவாட்டு இதயக்காரி

எந்தன் கண்களில்
குண்டூசி குத்திய பார்வை;

அலையும் இடங்களில்
அலைபாய்கிறது என் இதயம் அவளுடன்;

அவள் சுட்டி தொல்லை இல்லாமல்
என்னை சுட்டுத் தள்ளும் தோட்டாக்கள்;

இனி!

நாட்குறிப்பில் பேனா முள்ளில்
தொட்டு நனைக்க காத்திருக்கும் கண்ணீர்;

வண்ணமில்லாமல் எழுத காத்திருக்கும்
இருண்ட காலம்;

அதை நினைக்கையில்!

கருவாட்டு முள்ளிலும் உதிரம் கொட்டுகிறதே!

அவள் இதயத்தில் உதிரம் இல்லையோ?

கருவாட்டு இதயக்காரி!

எழுதியவர் : மணிபாலன், தொப்பையாங்குளம (25-Jul-19, 2:54 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 143

மேலே