வாழை இலைக்கு வாய்ப்புக் கொடுப்போம்
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
வாழை இலைக்கு
வாய்ப்புக் கொடுப்போம் - தன்னை
வாழ வைத்த
தங்கள் எசமானர்களை
வாழ வைக்கும்
என்பதால் மட்டுமல்ல
வாய்க்கு ருசியாய் நாம்
வயிற்றுக்கு உணவிட்ட பின்
வாரிச் சுருட்டப்பட்ட அவை
வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுப் பசியாற்றி
வாழ வைக்கும் என்பதாலும்…