தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு
இடம்:  அயர்லாந்து
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2019
பார்த்தவர்கள்:  3031
புள்ளி:  37

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியங்களின் மீதும், தமிழ்ப் பண்பாட்டு, கலாச்சாரப் பண்பாடுகளின் மீதும் ஆர்வம் அதிகம். சமூகப் பிரச்சினைகளின் தாக்கத்தினால் சமூகத்தின் மேல் அக்கறையுள்ள குடிமகனாக வாழ்வதற்கும் முயற்சி எடுக்கிறேன்.

என் படைப்புகள்
தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு செய்திகள்
தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2020 8:55 am

அத்தனையும் அழகோ
கண்டதும் காதல் ஓடுகிறது பாதி
கண்டுப் பழகியபின்காதல் பாதி
வார்தை ஜால வர்ணனை பெண்ணை
ஈர்கும்காதலன்று யில்லை இன்று
வர்ணனை சொல்லானை விரும்பாள் காதலி
கர்ண கொடூரமும் பாவம்
வர்ணனை அழகுக்கே சொந்தமா என்ன ?


வார்த்தது அவனே அவன்வார்ப் பூற்ற
ஆண்டவன் படைப்பில் அத்தனையும் அழகோ
இலக்கியப் புளுகுகள் கொஞ்சமே அழகாம்
இன்றைய சினிமாப் பெண்கள் கவிஞரின்
இன்றைய வர்ணனை உண்மை வர்ணனை
மற்ற வான்கோழி யுங்குட்டைச் சிறகுடன்
இடுப்பாட்டி விறிக்க சிறப்போ
தடுப்பா ரின்றி கெடுகிற திவ்வுலகே

மேலும்

ஆவுடையப்பன் அவர்களுக்கு வணக்கம் பாராட்டுக்களுக்கு நன்றி. . இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 15-Jan-2020 8:17 am
அத்தனையும் அழகோ :----கவிதை நயம் படித்து அனுபவிக்க வேண்டிய கவிதையின் கருத்துக்கள் தங்கள் கவிதையினைப் படித்து பகிர்ந்தேன் கவின் சாரலின் விமர்சனமும் படித்தேன் 14-Jan-2020 6:49 pm
சாரி சார் பின் அடிகளில் எதுகை அழகுடன் அழகாகவே செல்கிறது நேரிசை ஆசிரியப்பா . 14-Jan-2020 5:26 pm
தம்பி கவின்சாரலனுக்கு வணக்கம் பார்ட்டுக்கு நன்றி அத்தனையும் அழகோ முதல் வரியல்ல தலைப்பு வரி 14-Jan-2020 4:36 pm
தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2020 9:23 am

கிராமத்து காதல்♥️♥️பொங்கல் வாழ்த்துக்கள்
---------
- பாலு.

"பழைய கஞ்சி, பச்ச மிளகாய், இரண்டு துண்டு கருவாடும் கொண்டாந்திருக்கேன், மச்சான் .... வாய்யா... வந்து சாப்பிடு. "
"வாடி என் அழகு மயிலே,
நீயே உன் கையாலேயே ஊட்டி விடேன்"
"ரொம்ப தான் உனக்கு ஆசை மச்சான் "
"அப்ப ஊட்டி விட மாட்டியா என் அழகு தங்கமே"
" குழந்தை பாரு... சரி...கிட்ட வா ஊட்டி விடறேன் ,"
"நல்லா இருக்கா மச்சான் "
"உங்கையால விஷத்தை கொடுத்தாலும், அது எனக்கு அமிர்தம் தாண்டி என் செல்ல கிளியே"
"பழைய கஞ்சின்னு கிண்டல் பண்றியா, ஏன்? மச்சான் "
"போடி கிறுக்குக்கு, என் ஆத்தா மேல சத்தியம

மேலும்

தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2020 5:43 pm

பூ 🌹💐🌸🌺🌷

பூவுக்கு தெரியாது அது அழகு என்று
பூவுக்கு தெரியாது அது மென்மையானது என்று
பூவுக்கு தெரியாது அதற்குள் சுவையான தேன் இருக்குதென்று
பூவுக்கு தெரியாது அதனுள் கனி இருக்கதென்று
பூவுக்கு தெரியாது அதன் மேல் பனி உறங்குது என்று
அழகிய பூவே உன்னை ரசிக்காதவன்
ஒருவன்
இறந்துவிட்டான்
இன்னொருவன் இன்னும் பிறக்கவேயில்லை.

மேலும்

பொங்கல் வந்தது
புதுப் பானையும் வந்தது
புத்தரிசியும் வந்தது
புதுப் படமும் வந்தது
பொங்கி வழிந்தது
எங்கள் வீட்டுப் பானையில்
ஆழாக்கு பாலும்
எங்கள் தலைவரின் போஸ்டரில்
ஐம்பது லிட்டர் பாலும்…
பொங்கலின் புதுப் பரிமாணம்

மேலும்

பட்டி பலுகப் பலுக
பால் பானைப் பொங்கப் பொங்க
தீமைகள் முறிந்தோட
நன்மைகள் நின்று துலங்க
பொங்கலோ பொங்கல்!

உழவும் தொழிலும் பெருகிட
நிலமும் நீரும் திளைத்திட
வயலும் வாழ்வும் செழித்திட
வறுமையும் வெறுமையும் நீங்கிட
பொங்கலோ பொங்கல்!

தீந்தமிழ் திசைதோறும் நிரவிட
பைந்தமிழ் பாரெங்கும் பரவிட
முத்தமிழ் மனமெங்கும் நிறைந்திட
கன்னித்தமிழ் காலமெலாம் நிலைத்திட
பொங்கலோ பொங்கல்!

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மேலும்

பட்டி பலுகப் பலுக
பால் பானைப் பொங்கப் பொங்க
தீமைகள் முறிந்தோட
நன்மைகள் நின்று துலங்க
பொங்கலோ பொங்கல்!

உழவும் தொழிலும் பெருகிட
நிலமும் நீரும் திளைத்திட
வயலும் வாழ்வும் செழித்திட
வறுமையும் வெறுமையும் நீங்கிட
பொங்கலோ பொங்கல்!

தீந்தமிழ் திசைதோறும் நிரவிட
பைந்தமிழ் பாரெங்கும் பரவிட
முத்தமிழ் மனமெங்கும் நிறைந்திட
கன்னித்தமிழ் காலமெலாம் நிலைத்திட
பொங்கலோ பொங்கல்!

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மேலும்

அந்தக் கண்ணாடித்
தொட்டியின் கலங்கலான
நீர்ச் சுனைக்குள்
வண்ணமிகு மீன்குஞ்சுகள்
சுற்றிச் சுற்றி நீந்தின
கண்ணாடிக் கூண்டுக்குள்
கைதியாக்கப் பட்டு
‍ செயற்கைச் சூழலுக்குள்
சிறை வைக்கப்பட்ட
விடயம் புரியாமல்

சுதந்திரக் காற்றைச்
சுதந்திரமாய் சுவாசிக்கும்
எசமானர்கள்
மீன் குஞ்சுகளுக்கு
இரையிட்டு இரக்கங் காட்டினர்
பாசம் பொழிந்தனர்

நீர்ப் பரப்பின்
மேல் மிதந்த
இரைத் துண்டுகளை
லாவகமாய் தாவிப் பிடித்து
ருசித்து விழுங்கி
திருப்தி கொண்டு நீந்திய
மீன் குஞ்சுகளுக்குத் தெரியாது
அவை ஆயுள் கைதிகளென்று.

செய்யாத குற்றத்திற்காய்
சிறைப் பட்ட
மீன்களுக்கு நீதி வழங்க
நீதிமன்றங்களுமில்லை
வழக்குத் தொடுக்க
வழக்கறிஞர்கள

மேலும்

சிந்தை நிறைந்தவளே
செழிப்பாய் இருப்பவளே
உயிரோடு கலந்தவளே
உயர்ந்து நிலைப்பவளே
மனதைக் கவர்ந்தவளே
மகிழ்வைக் கொடுப்பவளே
இனிதைத் தருபவளே
இனிப்பாய்ச் சுவைப்பவளே

நீ மூத்தவள் தாம்
முதியவள் அல்ல
இளமைச் செருக்கோடு
எப்போதும் இருப்பவள்
நீ பழைமையானவள் தாம்
பழையவள் அல்ல
புதுமைச் சிந்தனையை
புகுத்தி வாழ்பவள்

உம் பிள்ளை என்று சொல
எமக்கெப்பேதும் பெருமைதான்
எப்போதும் நா நிறைந்து
எத்திக்கும் எடுத்துத் தொடுக்க
எம்முடனே இருந்திடுவாய்
வற்றாத நீரூற்றாய்
வழியெங்கும் பொங்கிடுவாய்

வரலாற்றைக் கடந்தவளே
வரலாற்றைப் படைப்பவளே
வளமையாய் செழுமையாய்
நிறைவாய் நேர்த்தியாய்
எங்கெங்கும் நிறைந்தோங்க

மேலும்

பதின்ம வயதில்
யாம் பெற்ற வாழ்க்கை
பண்பான பல நட்பு
பருவ வயதிற்கேற்ற
பரவசமான பல நாட்கள்

கண் ஆடி முன் நின்று
கருத்தாய் கண் மை தீட்டல்
முகம் பளிச்சிட
பல இன்ச்சுக்கு முகப்பவுடர்
பார்த்து பார்த்து லிப்ஸ்டிக்
மீசை முளைக்கா நாட்களிலே
முகச்சவரம் பல நாள்
பல பேருக்கு
அது பொழுது போக்கு

கரம் பிடித்து நட்போடு
நடப்பது உண்டு
நட்பு மிகப்பெற்ற பல பேருக்கு
கண்ணோடு கண் பார்த்து
காதல் வந்து
கண் சிமிட்டுவதுமுண்டு
கனவாய் அதை நினைத்து
கடந்து செல்வதுமுண்டு

பாடப் புத்தகத்தினூடே
பிரபஞ்சனும் வைரமுத்துவும்
ராஜேஷ்குமாரும் வாலியும்
அகத்தா கிறிஸ்டியும்
ஷிட்னி ஷெல்டனும்
தலையணைக்கடியில் தவறாமல்

நடிகர்களும் நடிகைகளும்
வி

மேலும்

நன்றிகள் திருமிகு. வேலாயுதம் ஆவுடையப்பன். 08-Aug-2019 4:11 am
அந்த நாள் ஞாபகம் வந்ததே !! கனாக் காலம் மலரும் நினைவலைகள் ! படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் 06-Aug-2019 2:31 am

நாசித் துவாரங்கள்
சுவாசித்த மண்வாசம்
காதுக்குள் ஒலித்த
சடசட மழைச் சத்தம்
வீட்டு முற்றக் குழாய்க்குள்
வந்திறங்கிய மழை நீர்

வீதியில் கரை புரண்டோடிய
செம்மண் தோய்ந்த பெருவெள்ளம்
செடிகளின் இலைகள் தோறும்
முத்து முத்தாய் மழைத்துளி

மழை நேரத்து
மாலை வேளையில்
மனங்குளிர்ந்த மகிழ்ச்சியுடன்
கையில் காகிதக் கப்பலுடன் நான்

கவலை தோய்ந்த முகத்துடன்
துணை துறந்த
காகிதக் கப்பல் மாலுமியாய்
அந்தக் கட்டெறும்பு

திடுக்கிட்டு விழித்தேன்
சிறுவயது நினைவலைகள்
கனவாக கண்ணயர்ந்த வேளையில்
கனவே கலையாதே!

மேலும்

வாழ்த்திற்கு நன்றிகள் ஆயிரம் திருமிகு. வேலாயுதன் ஆவுடையப்பன். 19-Jul-2019 10:51 am
கனவே கலையாதே! புதுமையான கவிதை வரிகள் பாராட்டுக்கள் 19-Jul-2019 5:42 am
தமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jul-2019 3:36 am

வாழிய தமிழ் வாழியவே!

அவள் அமிழ்தினும் இனியவள்
இயல்பாய் இசையாய் நாடகமாய்த் திகழ்பவள்
ஆயிர ஆயிரமாண்டாய் வாழ்பவள்
எனினும் எப்போதும் இளமையாய் இருப்பவள்
உம்மையும் எம்மையும் இணைத்தவள்
உலக மொழிக்கெல்லாம் மூத்தவள்

தொல்காப்பியமும் திருக்குறளும் தொடுத்தவள்
ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங் காப்பியங்களையும் கொடுத்தவள்
அகத்திலும் புறத்திலும் திளைத்தவள்
பக்தியையும் புரட்சியையும் ஒரு சேர ஊட்டியவள்
கல்லில் மட்டுமல்ல கணினியிலும் ஒளிர்பவள்

அவள் நம் தாயவள், தமிழ்த் தாயவள்
வாழிய அவள் வாழியவே!

மேலும்

நன்றிகள் திருமிகு. பாலு. 19-Jul-2019 10:49 am
நன்றிகள் திருமிகு. வேலாயுதன் ஆவுடையப்பன். 19-Jul-2019 10:48 am
தமிழ் மைந்தன் இலக்கியப் படைப்பு புதுமை பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 19-Jul-2019 5:40 am
அருமை 18-Jul-2019 8:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி
user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
balu

balu

திருவொற்றியூர்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

balu

balu

திருவொற்றியூர்
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
மேலே