தென்றல் தமிழ்பாடும் தென்பொதிகை மலையோரம்
இயல்பாய் எழுதிய பா
தென்றல் தமிழ்பாடும் தென்பொதிகை மலையோரம்
தென்னங்கீற் றுச்சன்ன லில்கதிராடும் காலைநேரம்
கன்னங் கருங்கூந்தல் கார்முகிலாய் காற்றிலாட
மின்னல்விழி நீவருங்கால் உள்ளம் துள்ளுதே !
இப்பொழுது ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக
தென்றல் தமிழ்பாடும் தென்பொதி கையோரம்
தென்னங்கீற் றில்கதி ராடிடும் காலைநேரம்
கன்னங் கருங்கூந்தல் காற்றிலாட நீவருங்கால்
புன்னகையே துள்ளுதேஉள் ளம் !