கண்ணே கவியெழுது

தென்றல் ஒருகவிதை எழுத
மலர் இதழ் விரித்தது
வளர்நிலா முழுமை எழுத
நீலவானம் தான் விரிந்தது
அலைகள் காதல் கவியெழுத
கரைகள் மணல் விரித்தது
எண்ணங்கள் எல்லாம் கவிதை எழுத
தாள் விரித்தது எழுத்து !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-19, 7:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே