தனிமையின் விழிப்பு

தெரு ஓர பூங்கா!
யாருமற்ற மனித மறைவு பிரதேசம் போல்,
பூங்கா நாற்காலி.
ஊரடங்க உத்தரவாய்
அமைதி
என் தனிமையை சீண்டாமல்...
தனிமையை பங்கிட்டு அமர்ந்து கிடந்த நாய்....

காது குழலை அடிக்கடி தீண்டி விட்டுப் போகும்..
காற்றின் மௌன ராகம் ...

அமைதியின் அவசரம் புரிந்து...
ஒலி எழுப்ப மறந்து செல்லும் சாலையோர வாகனங்கள்....

இயற்கையின் ஒத்துழைப்போடு
இயைந்து சென்ற அமைதி நொடி.....

அத்தனையையும் உடைத்தெறிந்தது
பூங்கா மூட எழுப்பப்பட்ட ஒலி

எழுதியவர் : மணிவண்ணன் மா (5-Sep-19, 6:31 pm)
சேர்த்தது : Manivannan
Tanglish : thanimaiyin vilippu
பார்வை : 77

மேலே