இதயம் பேசுகிறேன்

நிலை இல்லா
உலகில்
அவள் நிரந்தரம்
என உனை நினைக்க
வைத்தது
என் தவறே.... தான்......

உன்னோடு பேசிட,
சிரித்திட...
உனக்கான உறவுகள்...
மண்ணில் ஆயிரம் உண்டு....!!
அதனால் தானோ என்னவோ
உன்னில் துடிக்கும்
என்னையே நீ மறந்தாய்....
என் வலியை
உணராமலே.....
சிரிக்கிறாய்....
அவளோடு.........!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (10-Sep-19, 3:54 pm)
Tanglish : ithayam pesukiren
பார்வை : 692

மேலே