வருவேன்

காதலின் முழு அடையாளம் தெரியுமுன்னே என்னுள் வந்து விட்டாய்.
கடவுளின் பிச்சையாய் நல்ல துணையை தந்து விட்டாய்.
என் தாயின் எண்ணத்தை புரியும் வயதில் நான் இல்லை.
என் காதலை ஏற்கும் வயதில் அவள் இல்லை.
என் காதலை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை.
என்னை வாழ்த்த அவளுக்கோ மனமில்லை.
பெண் பார்க்க தினம் ஒரு கூட்டம் வாசலில்,
கடவுளும் கை விட்டது,
வேறு ஒருவனுடன் கையும் பிடி பட்டது.
செல்கிறேன் முடிவில்லா பயணத்திற்கு
மீண்டும் வருவேன்
அவளுக்கே மகளாக
உனக்கு மனைவியாக,காதலியாக அல்ல..

எழுதியவர் : துர்கா விவேகானந்தன் (16-Sep-19, 10:12 pm)
Tanglish : varuven
பார்வை : 92

மேலே