அணையாய்

அதற்கு இதுவல்ல காலம்,
ஆற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படுபவனால்
முடியவே முடியாது
ஆற்றைத் தடுத்து
அணை கட்ட..

அவன் வரட்டும் முதலில்,
ஆற்றோடு போகாமல்..

ஆற்றில் அணையென்பது
நேற்றே போட்டிருக்கவேண்டும்-
வெள்ளம் வருமுன்னே,
வாழ்க்கையிலும்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Sep-19, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே