மல்லிப்பூ ,, தென்றல், அவள்
வயலெல்லாம் மல்லிப்பூ
பூத்து குலுங்கிநிற்க
திசையெல்லாம் வாசம் பரப்பி
மலரோடு உறவாட
அந்தி சாயும் வேளையினில்
தென்றல் வந்தது - அவள் முந்திக்கொண்டாள் ,'
' தென்றலே , என் மணாளன்
இன்னும் வரவில்லை
கால்கடுக்க காத்திருக்கிறேன்
நான் இங்கு, நீ அவனிடம்
எனக்காக தூது செல்வாயோ '
என்றாள்........ பாவம் தென்றல்
சொல்லாமல் சென்றது
அவனிடம் அவள் தூதேந்தி
பாவம் மல்லிப்பூ..... தென்றல்
தொடாமல் போக, வாடியது
வாசமும் இழந்து!
என்று