அவள்
இன்று இளமையில் அவள்
அங்கமெல்லாம் அழகு கொஞ்ச
செடியெல்லாம் பூத்துக்குலுங்கும்
செம்பருத்திப்போல் காட்சி தருகிறாள்
இந்த இவள் அழகு என் மனதை விட்டு
என்றும் நீங்காது .....
நாளை மூப்பு வந்து அழகைக் குலைத்தாலும்
அது என் மனதில் தங்காது
என் மனதில் அவள் உயிர்கொண்ட சித்திரப்பாவை
என்றும் எப்போதும்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
இதை என் மனதிற்கு !