என்னவனே உன்னைத்தான்
![](https://eluthu.com/images/loading.gif)
பருவத்தின் வாசலில்
பாசாங்கு மனப்பரப்பில்
பாதியாகிப் போன
பாவையென் நிலையறிவாயா. . .
உருவத்தின் செழிப்பில்
உள்ளார்ந்த களிப்பில்
உன்னைத் தொலைத்து
உறைந்து போகிறாயா. . .
நெடுநாள் ஆசைகளை
நெஞ்சினில் புதைத்து
நேசக்கரங்களை தினம்
நோக்கியே அழைக்கிறேன்.
ஆதவனுள் பனியாக
அமிழ்ந்திட ஆசையுண்டு.
ஆகாயம் பூமிக்கும்
அளந்திட எண்ணமுண்டு.
கொஞ்சம் காதல்
கோபுர நிழலாய்
காவல் கொடு போதும்
கன்னியின் மனச்சிறையில். .
- நெல்லை ஏ.எஸ்.மணி-