ரேனுஸ்ரீ-18

சில நிமிடங்களுக்கு பிறகு யாரோ வரும் சத்தம் கேட்டு பார்த்தேன்.
ஸ்ரீ சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்து அதை நிறுத்தி விட்டு என்னை பார்த்தபடி என்னை நோக்கி வந்த்துக்கொண்டிருந்தான்,அவன் கையில் ஒரு பை இருந்தது.
ஏதும் புரியாது குழப்பத்தோடு அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.
வந்தவன் என் அருகே சிறு இடைவெளி விட்டு அமர்ந்தான்,பின்பு அவன் வைத்திருந்த பையில் இருந்து நீரையும்,நுங்கையும் வெளியே எடுத்தான்.

ஸ்ரீ நுங்கு இருந்த கவரின்(cover )முடுச்சை(knot ) பிரித்தபடி என்னை பாராமல் நீர் பாட்டிலை என்னிடம் நீட்டினான்.
குடிப்பதற்கு ஒரு துளி நீர் கிடைக்காதா என்று ஏங்கிய எனக்கு நீர் கிடைத்தும் அதை வாங்கி குடிப்பதற்கு தயக்கமாக இருந்தது,நீரை கையில் வாங்காமல் அமைதியாக இருந்தேன்.
நான் நீரை வாங்கிகொள்ளவிலை என்பதை உணர்ந்த ஸ்ரீ என்னை தலை நிமிர்ந்து பார்த்தான்,பின்பு என்னை பார்த்தபடி பாட்டிலின் முடியை திறந்து மீண்டும் நீரை என்னிடம் கொடுத்தான்.
அவனது கண்கள் நீரை குடிக்க கூறி வேண்டியது.

நீரை வாங்கி மூச்சு முட்ட வேகமாக வேகமாக குடித்தேன்,நீர் தொண்டையில் இறங்கும் போது கடுமையான வழி ஏற்பட்டது,நான் குடித்த வேகத்தில் நீர் தலைக்கு ஏறியது.

ஸ்ரீ அவனுடைய கைக்குட்டையை என்னிடம் கொடுத்து விட்டு
என் தலையை தட்டிவிட்டான்,இரும்பல் மெல்ல குறைந்து நின்றது.
ஸ்ரீயை தவறாக புரிந்துகொண்டதை நினைத்து வருந்தியபடி அவனை பார்த்தேன்.
அவன் என் பார்வையை தவிர்த்தபடி நுங்கின் தோலை உறிக்க ஆரம்பித்தான்.

மீதி இருந்த நீரை கையில் ஊற்றி முகத்தை கழுவி பாட்டிலை மூடியபடி ஸ்ரீயை பார்த்தேன்.
அவன் தீவிரமாக நுங்கை உரித்துக்கொண்டிருந்தான்.
"நா யாருனு தெரிஞ்சு இதையெல்லா செய்றானா?,இல்ல ஐயோ பாவோ யாரோ பைத்தியக்கார பொண்ணுன்னு நெனச்சு பரிதாபப்பட்டு செய்றானா?" என்று யோசித்தபடி அவனை பார்த்தேன்.

ஸ்ரீ உரித்த நுங்கில் ஒன்றை எடுத்து என் கால் விரல்களில் ஏற்பட்ட காயத்தின் மீது வைத்தான்,நுங்கின் சாறு பட்டவுடன் குளிர்ச்சியாகவும்,இதமாகவும் இருந்தது ஆனால் சில நொடிகளிலே எரிச்சல் எடுத்தது,எரிச்சல் தாங்காது சத்தமிட்டேன்,அதை கேட்டவுடன் ஸ்ரீ என்னை தவிப்போடும்,கவலையோடும் பார்த்துவிட்டு நுங்கை கவரின் மீது வைத்தான்,பின்பு எதையோ யோசித்தபடி அவன் கால் சட்டை பையில்(pant pocket ) இருந்து அவனுடைய
அலைபேசியையும்(phone ),தலையணி கேட்பொறியையும்(headphone )வெளியே எடுத்தான்.

பின்பு தலையணி கேட்பொறியை(headphone )அலைபேசியுடன்
(phone )இணைத்து விட்டு கேட்பொறி கருவிகளின்(ear plug ) ஒன்றை அவன் காதில் மாட்டிக்கொண்டு,மற்றொன்றை சிறு தயக்கமுமின்றி
என் காதில் மாட்டினான்.
ஸ்ரீ அவ்வாறு உரிமையோடு நடந்துகொள்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.

ஸ்ரீ தீவிரமாக அலைபேசியை இயக்கிக்கொண்டிருந்தான்.

நமக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கைபேசியில் பாடலை தேர்வு செய்கிறான் போல என்று நினைத்தபடி அவனையும் தொலைபேசியையும் பார்த்தேன்.

சில நொடிகளுக்கு பிறகு கேட்பொறியில் பாடல் கேட்க ஆரம்பித்தது.
பாடலை ஆர்வத்தோடு கேட்க துடங்கினேன்,பாடலின் தொடக்க இசை முடிந்து பாடல் வரிகள் வந்தது.
பாடல் வரிகள்:
"என் காதல் சொல்ல நேரமில்லை
உன் காதல் சொல்ல தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி...."
பாடலின் வரிகளை கேட்டு அதிர்ச்சியோடு அவனை பார்த்தேன்,ஆனால் அவன் என்னை பாராமல் மீண்டும் என் காயத்தை ஆற்றும் வேலையை செய்துகொண்டிருந்தான்.
பாடல் தொடர்ந்து ஓடியது,
"உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தொழில் சாயா ஆசையில்லை
நீ போன பின்பு சோகமில்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி..."
பாடலின் வரிகள் என் வேதனையை தூண்டியது,தவித்த நிலையில் கலங்கிய கண்களோடு எனக்கு புரிய வேண்டும் என்பதற்காக இந்த பாடலை வைத்திருக்கிறானா அல்லது அவனுக்கு பிடித்த பாடல் என்பதற்காக இந்த பாடலை வைத்திருக்கிறானா என்று புரியாது ஸ்ரீயை பார்த்தேன்,ஆனால் அவன் கவனம் முழுவதும் என் காயத்தின் மீதே இருந்தது.

பின்பு என் கையை பிடித்து எங்காவது காயம் இருக்கிறதா என்று முன்னும்,பின்னுமாக திருப்பி பார்த்தான்,பின்பு கையில் காயம் இருப்பதை கண்டு ஓர் பெருமூச்சோடு அதன் மீது நுங்கை வைத்தான்.
அப்போது இந்த பாடல் வரிகள் வந்துகொண்டிருந்தது,
"ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி இந்த நிமிடங்கள் நில்லட்டுமே..
வேறேதும் நினைக்காமல் விழிமூடடி இந்த நெருக்கங்கள் தொடரட்டும்..."

அந்த வரிகளை கேட்டபடி மனம் உருக காதலோடு அவனை பார்த்தேன்,அவனும் திடிர்யென அவன் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு என் கண்களை பார்த்தான்,அப்போது அவனுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது,தவித்த நிலையில் என் கண்களை தவிர்த்தபடி அலைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றான்.

இருவரின் காதிலும் கேட்பொறி கருவி(ear plug ) இருந்ததால்,அலைபேசியில் வந்த அழைப்பை என்னால் கேட்க முடிந்தது,ஸ்ரீ அலைபேசியை ஏற்றவுடன் ஸ்ரீயின் நண்பன் ஸ்ரீயை பேச வீடாமல் ஸ்ரீயிடம்,
"டேய் ஸ்ரீ,சாரி டா,அம்மா கூப்பிட்டுட்டே இருந்தாங்க அதா சரியா பேச முடில,நீ ஒன்னு கவல படாத நாளைக்கு காலில உன்னோட ஆள பத்தின எல்லா டீடைல்சோ(detail )உன் கைல இருக்கோ செரியா"என்று கூறினான் ஸ்ரீயின் நண்பன்.
ஸ்ரீ சங்கடத்தோடு என்னை பார்த்து விட்டு"அப்பறமா பேசற டா புருஞ்சுக்க" என்று கூறி அழைப்பை துண்டித்தான்..

ஸ்ரீயின் நண்பன் பேசியதை கேட்ட பிறகு மிக வருத்தமாக இருந்தது.

அலைபேசியை துண்டித்தவுடன் மீண்டும் பாடல் கேட்க துடங்கியது.

ஸ்ரீ வேறு யாரையோ விரும்புகிறான் என்று தெரிந்தவுடன் மிக கஷ்டமாக இருந்தது,அதிர்ச்சியில் சிலையை போல அமர்ந்திருந்தேன்.
அப்போது மீண்டும் அலைபேசிக்கு அழைப்பு வந்தது,ஸ்ரீ உடனடியாக அழைப்பை துண்டித்தான்,மீண்டு அழைப்பு வந்தது ஸ்ரீ சலித்து கொண்டபடி அழைப்பை ஏற்று"டேய் அப்ரோ பேசுறேன்னு சொன்ன இல்ல"என்றான்.

"சாரி டா மச்சா ஒரே ஒரு டவுட் டா ஒ ஆளோட அப்பா பெரு தனபாலுனுதானே சொன்ன?ராம் இல்லனு சொல்றாடா,மச்சா நீ சொல்றா தங்கச்சியோட அப்பா பெரு தனபால் தான?"என்று கேட்டான் ஸ்ரீயின் நண்பன்.
ஸ்ரீ கோபத்தோடு தவித்தபடி"இல்லடா.."என்றான்.

அப்போது நான் வேகமாக என் காதில் இருந்த கேட்பொறி கருவியை எடுத்து ஸ்ரீயின் கையில் கொடுத்தேன்.
ஸ்ரீ என்னை பார்த்தபடி தயக்கத்தோடு அதை வாங்கி அவனுடைய காதில் மாட்டிக்கொண்டு சிறிது தூரமாக சென்று பேசினான்.

அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்து சிதறியது,என்னால் அதற்க்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை,ஸ்ரீ வந்தவுடன் ஏதும் பேசாமல் ஸ்ரீயிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஸ்ரீ என் அருகே வந்து நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தேன்,ஸ்ரீ என்னை கவலையோடும்,ஏட்கத்தோடும் பார்த்தபடி கையை நீட்டினான்,
அவனது கண்ணில் தெரிந்த வலியை பார்த்தபடி என் கையை கொடுக்க சென்றேன்,அப்போது எனக்கு சிறிது நேரத்திற்கு முன் நடந்த சம்பவம் நினைவிற்க்கு வந்தது,இம்முறை இவன் எதை கேட்கிறான் என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி ஸ்ரீயை பார்த்தேன்,அப்போது எனக்கு ஸ்ரீயின் நீர் குடுவையும்,கைகுட்டையும் என்னிடம் இருப்பது நினைவிற்கு வந்தது,உடனடியாக ஸ்ரீயின் நீர் குடுவையையும்,கைகுட்டையையும் எடுத்து ஸ்ரீயிடம் கொடுத்தேன்.

அவன் என்னை வினோதமாக பார்த்து விட்டு எதையோ யோசித்து சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகித்தபடி நீர் குடுவையையும்,கைகுட்டையையும் வாங்கி பையில் வைத்துவிட்டு வெட்கத்தோடு புன்னஹித்தபடி என் கையை பிடித்து என்னை எழ செய்தான்.

எழுந்து நின்றவுடன் வலது கணுங்காலில் மோசமான ஒரு வலியை உணர்தேன்,வழியில் துடித்தபடி சரியாக நிற்க முடியாமல் தடுமாறினேன்,தடுமாறிய என்னை பிடித்தான் ஸ்ரீ,அப்போது அவன் கண்களை மிக அருகில் இருந்து கண்டேன்,எங்களின் முதல் சந்திப்பு நினைவிற்கு வந்தது,மகிழ்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது,அவனின் கண்களை தவிர்த்தபடி thank you என்று சொல்ல வாயெடுத்தேன் அதற்க்குள் ஸ்ரீ என்னிடம் "sorry "என்று கூறினான்.

எதற்காக சாரி கூறுகிறான் என்று புரியாது அவனை பார்த்தேன்.

"சாரி,நீ பின்னாடி வந்தது எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா உன்ன இந்த அளவுக்கு கஷ்டப்பட விட்டிருக்கமாட்டா,நா உன்ன மார்க்கெட்லியே பார்த்த,நீ ஒ பிரெண்டோட பிள்ளையார் கோவில்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்த"என்று கூறி வலியோடு புன்னகித்தபடி "நீ என்ன பாக்கவே இல்ல,நீ என்ன மறந்திருப்பன்னு நினச்ச"என்றான்.

அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

"உன்ன இங்க பார்த்தது எவ்வளவு டென்ஷன் ஆச்சுன்னு தெரியுமா?,நீ பின்னாடி வந்ததே எனக்கு தெரில,ஏதோ நா பார்த்த! இல்லனா!?,என்று கூறி சலித்து கொண்டபடி"திரும்ப இந்த மாரி எப்பவு செய்யாத",என்று உரிமையோடும் அக்கறையோடு கூறினான்.

எட்டு வருடங்கள் ஆகியும் ஸ்ரீ என்னை மறவாமல் நினைவில் கொண்டு அக்கறையோடு என்னிடம் பேசுவதை கண்டு மகிழ்ச்சியில் புன்னகித்தபடி அவனை பார்த்து"ஸ்ரீ.."என்று அவன் பெயரை கூறி முடிப்பதற்குள் ஸ்ரீ என்னிடம்"ரேணு!,ரொம்ப பசிக்குதா?"என்று கேட்டான்.

செயின் பசி அறிந்த தாய் போல ஸ்ரீ என்னிடம் கேட்டதை பார்த்து உருகி நின்றேன்.

"வீட்டுக்கு போலா,எங்க அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க, அதுவு மருமக வந்திருக்காணு சொல்லிட்டு ஏதாவது ஸ்பெஷலா செஞ்சுதந்தாலு தருவாங்க"என்று கூறி புன்னகித்துவிட்டு"ஹா,அப்ரோ எ பிரெண்டு கிட்ட ஏ ஆளோட அப்பா பெரு தனபால் இல்ல கோபால் னு தெளிவா சொல்லிட்ட"என்றான்.

அவன் கூறியதை கேட்டு மூச்சடைப்பத்து போல இருந்தது,என் ஸ்ரீ எனக்கு கிடைத்து விட்டான் என்று நினைத்து மனம் அமைதி அடைந்தது,மகிழ்ச்சின் உச்சம் அழுகை என்பதால் வெம்பி வெம்பி அழுகை வந்தது.

நான் அழுவதை கண்ட ஸ்ரீ பதட்டத்தோடு என்னை பார்த்து"ஹே!சாரி,நா உன்ன கேக்காமலே சொல்லிட,பாப்பா,இங்க பாரு அழாத மா"என்று கூறி தவித்தபடி தயக்கத்தோடு என்னை பார்த்து"நீ என்ன விரும்புறதான?"என்று கேட்டான்.

அழுதுகொண்டே புன்னகித்தபடி "ம்ம்ம்...."என்று தலையை ஆட்டினேன்.

ஸ்ரீ ஓர் பெருமூச்சோடு புன்னகித்தபடி"போலாமா,மிஸ் ரேணு ஸ்ரீ கோபால்?"என்று கேட்டான்.

ம்ம்..,என்று கூறி அவனை பார்த்து புன்னகித்தபடி நடக்க முயன்றேன்,ஆனால் என்னால் நடக்க முடியவில்லை எனது வலது கணுங்கால் வீங்கி இருந்ததால் நடப்பது கடினமாக இருந்தது.

என்னுடைய நிலையை கண்ட ஸ்ரீ என்னுடைய அனுமதியின்றி திடீர் என என்னை அவன் கைகளில் ஏந்திக்கொண்டான்.

"ஹே!!!,"என்று அதிர்ச்சியோடு அவனை பார்த்தேன்.

அவன் சலித்துக்கொண்டபடி என்னை பார்த்து"எட்டு வருஷோ உன்ன மனசுல சுமர்ந்து இருக்க,எ சைக்கிள் வரைக்கு உன்ன கையில சுமக்கமாட்டானா என்ன?"என்றான்.

காதலோடுஅவனை பார்த்து புன்னகித்தேன்.

சைக்கிளின் அருகே வந்தவுடன் ஸ்ரீ என்னை இறக்கிவிட்டான்,பிறகு என்னை பார்த்து சைக்கிளை கெட்டியாக பிடித்துக்கொண்டு அமர கூறினான்,அப்போது ஸ்ரீ எதையோ யோசித்தபடி என்னை பார்த்து"ஆமா உன்னோட friend எங்க"என்று கேட்டான்.

நான் தலையை குனிந்தபடி சங்கடத்தோடு"உங்கள பார்த்தவுடன நா பாட்டுக்கு ஓடி வந்துட்ட,அவகிட்ட சொல்லவே இல்ல,அவ அங்கதா இருப்பானு நினைக்குற,என்னோட போன்,பர்ஸ் எல்லா கூட அவகிட்டதா இருக்கு"என்றேன்.

நான் கூறியதை கேட்டு ஸ்ரீ என்னை பார்த்த பார்வை என்னை கொன்றுவிட்டது.
பின்பு சலித்துக்கொண்டே தலையை ஆட்டியபடி அவனுடைய அலைபேசியை எடுத்து என்னிடம் கொடுத்து அம்முவை அழைக்க கூறினான்.

அம்முவை அலைபேசி மூலமாக அழைத்த போது,அம்மு பதட்டமான குரலில் "ஹலோ"என்றால்.
என் தவறை உணர்ந்து கவலையோடு"அம்மு"என்றேன்.
"ரேணு"என்று அதிர்ச்சியோடு என் பெயரை கூறினால்.
"ம்ம்...,"நா தா என்றேன்.
அவள் மகிழ்ச்சியில் புன்னகித்தபடி"thank god "என்று கூறி சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு"எரும மாடே!சொல்லாம கொள்ளாம நீ பாட்டுக்கு ஓடி போயிட்ட,எனக்கு உயிரே போயிடுச்சு தெரியுமா,உன்ன தேடி நானு,உதையு தெரு தெருவை அலஞ்சுட்டு இருக்கோ,உன்னோட அம்மாவோ,தாத்தாவோ 4 முறை கால் பண்ணிட்டாங்க எடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாம நா பட்டபாடு எனக்குதா தெரியு"என்று கோபத்தில் கத்தினாள்.
"சாரி"என்றேன்.
ஓர் பெரு மூச்சோடு"எங்க இருக்க?,யாரோட போன்ல இருந்து பேசிட்டு இருக்க"என்று கேட்டால்.
"நா எங்க இருக்கன்னு தெரில,ஆனா நீ ஒன்னு டென்ஷன் ஆகாத நா பத்திரமா இருக்க,எ கூட ஸ்ரீ இருக்காரு நா அவரோட போன்ல இருந்துதா பேசுற"என்றேன்.
நான் கூறியதை கேட்டு சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு பின்பு குழப்பத்தோடு"எந்த ஸ்ரீ "என்றால்.
"சந்தைல நம்ப எந்த ஸ்ரீய பத்தி பேசுனமோ அந்த ஸ்ரீ"என்றேன்.
"seriously ?"நிஜமாவா?"என்று கேட்டால்.
"ya ,i 'm serious "என்றேன்.
அவள் மீண்டும் சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு"ம்ம்..,ஆச்சு நீ இப்ப எங்க இருக்கன்னு சொல்லு நாங்க வரோ"என்றால்.
நான் ஸ்ரீயை பார்த்து அட்ரஸ் என்றேன்.

அவன் போனை தன்னிடம் கொடுக்குமாறு சைகையில் கேட்டான்.

போனை அவனிடம் கொடுத்தேன்,ஸ்ரீ அம்முவிடமும்,உதையிடமும் விலாசத்தையும்,வழியையும் கூறி அலைபேசியை துண்டித்தான்.

பின்பு இருவரும் சைக்கிளில் பயணிக்க துடங்கினோம்.

மனது அமைதி ஆனா உடன்,அசதியில் உறக்கம் வந்தது,உறக்கத்தை கட்டு படுத்திகொண்டு அமர்ந்திருந்தேன்,சுமார் 1 மைல் தூரம் கடந்ததும் ஸ்ரீ ஒரு வீட்டின் முன்பாக சைக்கிளை நிறுத்தினான்.

அந்த வீட்டை சுற்றி விவசாய நிலங்களாக இருந்தது,சிறு தொலைவுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளும் இருந்தது.

இதுதான் ஸ்ரீயின் வீடு போல என்று நினைத்து பார்த்தேன்.

"இது பாட்டியோட வீடு ஆனா பாட்டி இப்ப இல்ல ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதா இறந்தாங்க"என்றான்.
"ஓ,சாரி"என்றேன்.
"வா"என்று கூறி அழைத்து சென்றான்.
கதவு திறந்த நிலையில் இருந்தது,இருவரும் வாசலில் நின்றிருந்தோம்.
ஸ்ரீ "அம்மா" என்று அழைத்தது உள்ளிருந்து ஸ்ரீயின் தாயார் வந்தார்,பின்பு என்னை மேல் இருந்து கீழாக பார்த்து எதையோ யோசித்தபடி தர்மசங்கடத்துடன் நின்றிருந்தார்.
ஸ்ரீ என்னை காட்டி அம்மா நா சொன்ன இல்ல இவதா "ரேணுஸ்ரீ கோபால்"என்று அறிமுகபடுத்தினான்.
நான் அவரை பார்த்து புன்னகித்தேன்.
அவரும் தயக்கத்தோடு என்னை பார்த்து புன்னகித்தார்.
"மா...,"என்று ஸ்ரீ அழைத்தது ஸ்ரீயின் அம்மா என்னை பார்த்து உள்ளே வருமாறு அழைத்தார்.
நானும் என்னுடைய வலது கால் வைத்து உள்ளே சென்றேன்.

தொடரும்...

எழுதியவர் : அனுரஞ்சனி (23-Nov-19, 3:13 am)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 233

மேலே