பிரசவ மருத்துவம்-உயிர் காக்கும் அறப்பணி, வியாபாரம் ஆகிவிட்டது

மருத்துவம்-சுகப் பிரசவம்.
உயிர் காக்கும் அறப்பணி, வியாபாரம் ஆகிவிட்டது!!


இந்தியாவில் தற்காலத்தில் தொண்ணூறு சதவீதப் பிரசவங்க்ள் அறுவைச் சிகிச்சை மூலம்தான் நடக்கின்றன!! - ஆய்வு முடிவுகள்!!


தொண்ணூறு சதவீதம் சிசேரியன் செய்வதற்கு மிக முக்கியக் காரணம், மருத்துவர்களும் அவர்களைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் நியமித்து, மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும், அறுவைச் சிகிச்சைகளையும் விற்பதற்காகக் கட்டி மேய்க்கும் பன்னாட்டு நிறுவனங்களும் செய்யும் சதிதான்!!
என்ன சதி?

மிக உறுதியான் உடலமைப்புள்ள தாய்க்குக் கூட டானிக், தடுப்பூசி, வைட்டலஜர் என்று தேவையில்லாமல் உயர்விலை மருந்துகளைக் கொடுத்துப் பலவீனப் படுத்துகிறார்கள். சகட்டு மேனிக்கு மிக வீரியமுள்ள இரசாயன மருந்துகள் தரப் படுவதால் பிரசவச் சமயத்தில் இளகி இயற்கையாக இருக்க வேண்டிய பெண்ணின் இடுப்பு எலும்புகளும் தசைகளும் வலிந்து விடுகின்றன.
போதாக் குறைக்கு செயற்கை டானிக்குகள் அவளின் உடலில் சோர்வு, தளர்ச்சி முதலிய அச்சுறுத்தும் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

எதற்காக?
அதைத்தெரிந்து கொள்ளும் முன் ஒரு மிக முக்கியமான தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தையுடன் அரையணுவில் துவங்கி ஓரணுவாகிக் கருப்பையில் பத்து மாதங்கள் இணைந்திப்பது நஞ்சுக் கொடி. தாயிட்மிருந்து உயிர்ச் சத்துக்களையும் உடல் அணுக்களையும் பிற உடலமைப்பு உறுப்புக்களமைப்பு மூளை அமைப்புத் தகவல்களையும் தந்து வளர்த்து வரும் நஞ்சுக் கொடி ஒரு படைப்பு இரகசியம்!!
பிரம்மனின் அதிசயம்!!
அதில் தாயிடமிருந்து இடைவிடாது பாயும் இரத்தத்தில்தான் கரு முட்டையிலிருந்து முழுக் குழந்தை ஆகும்வரை அத்தனை உடல் அணுக்களுக்கும் தேவையான வேர் அணுக்கள் (ஸ்டெம் செல்ஸ்) குழந்தை உடலின் கட்டுமானப் பணிகளுக்காக இரத்தத்துடன் சென்றபடி உள்ளன.

குழந்தை பிறக்கும் நேரத்திற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் இதற்கான தொடர்புகள் ஒவ்வொன்றாகத்துண்டிக்கப் படுகின்றன, தாயின் உடலால். நஞ்சுக் கொடியும் குழந்தையின் உடலில் இருந்து பிரியத் தயாராகி விடுகிறது. அதாவது அது அழுகத் தொடங்கி விடுகிறது.

அதனால் அதில் நிறைந்திருக்கும் வேர் அணுக்கள் (ஸடெம் ஸெல்ஸ்) உடனடியாகக் குறைந்து மறைந்து விடுகின்றன.
பிரசவம் ஆனதும் அரை மணிக்குள் வெளியேற்றப் படும் நஞ்சுக் கொடி அழுகத் தொடங்கி விட்ட நிலையில்தான் வருகிறது!!

இந்த ஸ்டெம் ஸெல்ஸ் நஞ்சுக் கொடியில் அதிக எண்ணிக்கையில் எப்போது இருக்கும்?
குழந்தை பிறப்பதற்கு அரை மணிக்கு முன்வரை இருக்கும்.
இந்த ஸ்டெம் ஸெல்ஸ்தான் நமது உடலில் எலும்புகளின் மஜ்ஜையில் உற்பத்தி செய்யப் பட்டு நமது உடலின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு வேலைகளுக்கு அந்த்ந்த இடங்களுக்கு அனுப்பப் பட்டுப் பயன் படுகின்றன.

இந்த ஸ்டெம் ஸெல், ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஸெல். உடலின் எந்தப் பகுதிக்குத் தேவைப் பட்டாலும், அந்தத்தப் பகுதி ஸெல்களாகத் தம்மை மாற்றிக் கொண்டு அங்கு பதிந்து கொள்ளும். மூளையில் நரம்பணுக்களாகவும், இரத்தத்தில் சிவப்பணு வெள்ளையணுக்ககளாகவும், எலும்புகளில் கால்சைட் செல்களாகவும் தோலில் தோல் அணுக்களாகவும் மாற்றிக் கொண்டு இணைந்து கொள்ளும்.

இப்போது விஷயத்திற்கு வரலாம். மேற்கு நாடுகளிலும் அரபு நாடுகளிலும் செயற்கை உணவுகளை மட்டுமே பழைய உணவுகளை மட்டுமே சத்தற்ற மிருகக் கறிகளை மட்டுமே உண்டுவருவதால் அவர்களுக்குத் தற்காலத்தில் எலும்பு மற்றும் நரம்பு மண்டலங்கள் மிக மிக வலுவிழந்து மென்மை ஆகி விட்டன.
இவற்றை உறுதிப் படுத்த அவர்க்ளுடைய உடலில் போதுமான அளவில் ஸ்டெம் செல்ஸ் உற்பத்தி ஆவதும் இல்லை. இருப்பவையும் மிகப் பலவீனமாக உள்ளன.

இதற்கு மருத்துவர்கள், வலிமையான உயிர்ச்சத்து மிக்க ஸ்டெம் ஸெல் திரவங்களை நேரடியாக அவர்களின் உடலில் செலுத்தும் கோடீஸ்வர வைத்தியமான "ஸ்டெம் ஸெல் இன்ஃபூஷன் மற்றும் ட்ரான்ஸ்ப்ளாண்ட்" முறையைச் சிபாரிசு செய்து நடத்தி வருகிறார்கள். இந்த முறை இப்போது அங்கெல்லாம் மருத்துவரிடையே மிகவும் பிரபலம்.அதற்குக் காரணம், இதறகாக இலட்சக்கணக்கில் பணம் பிடுங்கலாம்!!

மிக அதிக அளவில் தற்காலத்தில் தேவைப் படும் இந்த ஸ்டெம் ஸெல்களுக்கு என்ன செய்வது?
வலிமையான உயிரோட்டம் மிக்க கலப்படமில்லாத ஸ்டெம் ஸெல்ஸ், ஆசிய நாடுகளிலும்
ஆப்பிரிக்க நாடுகளிலும், தென் அமேரிக்க நாடுகளிலும் வாழும் இனத் தூய்மையும் அளவற்ற நோயெதிர்ப்புத் தன்மையும் பாரம்பரிய உடல் கட்டுறுதியும் உள்ள மக்களிடம் இயற்கையாகவே நிறைந்துள்ளன.

இவர்களிடமிருந்து (அதாவது அவர்கள் இறக்கும் முன் அவர்களுடைய உடல் எலும்புகளின் மஜ்ஜையில் இருந்து) இதை ஊசிவழியாக எடுக்கலாம். ஆனால் இம்முறையில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து எடுக்கப் பட முடியும். ஆங்கிலேய ஐரோப்பிய வைரஸ்களுக்கு டன் கணக்கில் இந்த ஸ்டெம் ஸெல்ஸ் தேவைப் படுகிறது.

இவ்வளவு ஸ்டெம் ஸெல்ஸ் எடுப்பதற்கு என்ன வழி?
இருக்கிறது கோடிக்கணக்கிலான பிரசவங்களின் போது வெளிவரும் -----
நஞ்சுக் கொடி!!
ஆனால் இவை "உயிருடன்" கிடைக்க வேண்டுமே!! என்ன செய்யலாம்?

கருப்பையை விட்டு வெளிவராத உயிருள்ள நஞ்சுக் கொடிகள் எப்படிக் கிடைக்கும்!!
சிசேரியன் செக் ஷன் பிரசவம் மூலம் கிடைக்கும்!!

உயிருள்ள ஒரு நஞ்சுக் கொடியில் முன்னூறு எலும்புகளில் மஜ்ஜையில் உள்ள அளவிற்கு ஸ்டெம் செல்ஸ் கிடைக்கும்!!
நஞ்சுக் கொடிகளை உயிருடன் எடுப்பதற்காகவேதான் அத்தனை பெண்களையும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவர்களை மருத்துவமனைக் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டு வந்து விடுகிறார்கள்! ப்ரி நேட்டால் கேர் என்றும் போஸ்ட் நேட்டால் கேர் என்றும் தொடர்ந்து இளம் தாய் மார்களை மருத்துவ மனைகள் தங்க வைத்து விடுகிறார்கள்.

அப்படி சிசேரியன் செக் ஷன் செய்ய முடியாத போதும் அதற்குப் பெண்கள் ஒத்துக் கொள்ளாத போதும் இன்னொரு புது விளம்பரம் இருக்கிறது! இதை நம் நாட்டில் பெரிய "திரைப்படப் பெண் நட்சத்திரங்கள்" போட்டி போட்டுக் கொண்டு ஆதிரிக்கிறார்கள்! பணத்தை வாங்கிக் கொண்டுதான்!!

ஸ்டெம் ஸெல் வங்கிகள்!!
பிரசவத்திற்கு முன்பாகவே "உங்களுடைய எதிர்காலத் தேவைக்கு உங்கள சொந்த ஸ்டெம் ஸெல்களை சேமியுங்கள்!!நாங்கள் பாதுகாத்துத் தருகிறோம்!" என்று பொய் சொல்லி நஞ்சுக் கொடி சப்ளையை உறுதிப் படுத்திக் கொள்கிறார்கள்.
அதற்கு அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பெரிய தொகைகளை மறைக்க நம் பெண்களின் நஞ்சுக் கொடிகளைச் சேமித்துப் பாதுகாப்பதற்காக நம்மிடமே கட்டணமும் வாங்கிக் கொள்கிறார்கள்!!
இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களின் இலூமினாட்டிகளின் ஆணைப் படி, சுகப் பிரசவம் செய்ய ஊக்குவிக்கும் யாரையும் பயமுறுத்த (ஹீலர் பாஸ்கரைப் போல)க் கைது வழக்கு நடவடிக்கைகள் வருகின்றன.

********************************************************************************
இது இன்றல்ல ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னரே எனக்குக் கிடைத்த சொந்த அநுபவம்!!

பின்வரும் நிகழ்வுகள், நான் 1997இல் என் தங்கை மகளின் பிரசவத்தின் போதும் அதற்கு முன் என் மகளின் பிரசவத்தின் போதும் நேரடியாக அனுபவப் பட்டுப் போராடித் தடுத்த நிகழ்வுகள்!!

இருவருக்கும் வீட்டுச் சமையலில் தயாரான கிராமிய உணவு உண்டு வளர்ந்த கட்டுறுதியுள்ள நல்ல உடலமைப்பு! ஏழாம் மாதம் வரை மருத்துவ மனை செல்லாமல் குடும்ப மருத்துவர் (அவரும் ஒரு கிராமிய "அந்தக் கால மருத்துவர்!") அவ்வப்போது தரும் சாதாரண ஆலோசனைகளை மட்டும் பின்பற்றினோம்.
பிரசவத்திற்கு ஆறு நாட்கள் இருக்கும் வரை மருத்துவ மனைக்குச் சென்று சேரவில்லை.
குடும்ப மருத்துவரும் எனது நண்பரும் அவருக்குக் கட்டுப் பட்ட ஒரு மருத்துவ மனையைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள், மருத்துவ வசதி இல்லாத கிராமம் எம்பதற்காக மட்டுமே கடைசி வாரத்தில் மட்டும் அங்கு இருக்கச் சொன்னார்கள்.
ஆனால் அந்த மருத்துவமனையில் மிக மிகச் செலவு குறைவாகப் பிடிக்கும் என்பதும் காரணம். நஞ்சுக் கொடியை எடுக்கும் சிசேரியன் செக் ஷம் செய்ய விட்டால், இன்னும் செலவு குறையும் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்!!

ஒன்பதாம் மாத்தின் பின் பேறுகால இறுதியில்தான் ஒரு வாரம் முன்னர் எங்களது குடும்ப மருத்துவருடைய வீட்டில் இடம் இல்லாத நிலையில் அவரது பரிந்துரைப் படி அருகில் உள்ள அந்த நகர மருத்துவ மனைக்குச் சென்றோம். " பிரசவ அறை மட்டும் போதும். சுகப் பிரசவம் ஆகும் உடலமைப்புள்ள பெண். மருந்துகள் எதுவும் வேண்டியதில்லை. நான் என் நேரடிக் கண்காணிப்பில் வைத்துப் பார்க்கிறேன்" என்று அவர் அந்த மருத்துவ மனைப் பெண்மருத்துவ நிபுணரிடம் அழுத்தமாகச் சொல்லி அங்கு அனுப்பினார். கடைசி வரை ஸ்கேன் எடுக்க விடவில்லை நாங்கள். டானிக் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை! கடைசி மணி வரை வலி வராமல் இருந்த போதும் தூண்டுதல் மருந்து கொடுக்க விடவும் இல்லை.

அதனால் அங்கு போன நாளிலிருந்து பிரசவம் முடியும் நிமிடம் வரை அங்கிருந்த பெண் மருத்துவ நிபுணரின் நச்சரிப்பு. எச்சரிக்கை. வசவு எல்லாம் அளவில்லாமல் கிடைத்தன.
பிரசவத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் கூட "பாருங்கள் இந்த முரட்டுப் பிடிவாதம் மகா மோசம்!! சிசேரியன் செய்வதுதான் ஒரே வழி. இன்னும் உச்ச வலி வரவில்லைபாருங்கள். தூண்டுதல் மருந்து தர விட மாட்டேன் என்கிறீர்கள். ஸ்கேனிற்கும் எதிர்க்கிறீர்கள். கடைசியாகச் சொல்கிறேன். இனி என் பொறுப்புத் தீர்ந்தது. குழந்தையும் தாயும் இறந்தால் நீங்களே பொறுப்பு! இனி நர்சே பார்க்கட்டும். அதுதான் சுகப் பிரசவம் நிச்சயமாக ஆகிவிடும் என்கிறீர்களே!! நான் வீட்டிற்குப் போகிறேன்! இதோ இந்த சிசேரியம் செக் ஷம் மறுப்பு ஒப்புதல் படிவத்தை எழுதிக்கொடுங்கள்!" என்று எழுதி வாங்கிக்கொண்டு போய் விட்டார் அந்தப் பெண் மருத்துவ நிபுணர்.

அவர் சென்று பத்தே நிமிடங்களில் குழந்தை கைகளில். அங்கிருந்த தலைமை நர்ஸ் மற்றும் உதவி நர்ஸ், "எங்கள் ஆஸ்பத்திரியில் இதுதான் முதல் சுகப் பிரசவம்!! அதுவும் மேடத்தை எதிர்த்து இங்கேயே இருந்து கொண்டு சாதித்திரிக்கிறீர்கள். உங்கள் தங்கை பிரசவத்தால் மேடத்திற்கு இலட்சக் கணக்கில் நஷ்டம்" என்று வரலாற்றைச் சொன்னார்கள். எங்களது குடும்ப மருத்துவ நண்பருடைய பழக்கத்திற்காக வழக்குத் தொடுக்காமல் விட்டோம்.

எனது மகளின் பிரசவத்தின் போதும் இதே நாடகம் இன்னொரு மருத்துவ மனையில்.

நான் மருத்துவப் படிப்பு முதலாண்டு சேர்ந்து விட்டு, ஒரே வாரத்தில் டீனுடன் தகராறு செய்து விட்டு வெளிவந்து விட்டேன். அப்போதே தாங்க முடியாத ஊழல்!
இப்போது என்றால் ஐயோ!!
பிரசவத்திற்கு மருத்துவமனைக்குப்போகா விட்டால் வழக்குத் தொடுத்து உள்ளே வைத்து விடுவார்கள் போல் உள்ளது நிலை!!

எழுதியவர் : செல்வப் ப்ரியா - - சந்திர (6-Dec-19, 2:59 pm)
பார்வை : 65

மேலே