நிலவே நீ வாழ்க

காதலுக்கு தூது போய் தூது போய்
தேய்ந்து போனாலும் நீ சோர்ந்து போவதில்லை
நீல வானத்தில் நீ தேய்ந்தாலும் அழகு
வளர்ந்தாலும் அழகு
முழுதுமாய் ஒளிவிடும்போது பேரழகு
ஒப்பனைக்காக ஒருநாள் நீ திரை மறைவில்
போகும் போது
உலகமே இருண்டு போய்விடுகிறது
காதல் புரியும் போது காதலர்க்கு நீ மாலை நிலவு
திருமணத்திற்குப் பின் நீ தித்திக்கும் தேன்நிலவு
நீ கவிஞனின் காதலி
அவன் கவிதையின் தலைவி
நிலவே நீ வாழ்க
----கவின் சாரலன்