விலகி சென்ற காதலே.......

சுள்ளென்று சுடுகின்ற வெயில் காலத்திலும்
மனதுக்குள் மலைசாரலில் நனைந்து கொண்டிருந்தோம்,

நான் உன்னோடும்,
நீ என்னோடும் நேசம் கொண்டிருந்த காலங்களில்,

ஏனோ காலம் களவாடிக்கொண்டது
நாம் வசந்த காலத்தை,

இலையுதிர் காலம் முடிந்து பின்
மீண்டும் வசந்தத்தைப்போல்,
சில காலம் வசந்தத்தில் பயணித்து,
பின் வேரறுந்த மரமாகி போனேனடா,

உன்னோடிருந்த இன்பபொழுதுகள்,
நெஞ்சத்தில் நினைவோடும் நேரம்,
தரையில் நழுவி விழுந்து தண்ணிருக்காக,
ஏங்கும் மீனை போல் அல்லவா மனம் விம்முகிறது

அழகாய் அமைதியாய் செல்லும்
உன் நந்தவன வாழ்கையில்
கட்டுதீயாய் நான் வர விரும்பவில்லை,
எனினும்
என் வாழ்க்கை பாதையில்
உன் பயணம் முடிந்திருந்தாலும்,
என் நினைவு பாதையில்,
உன்னை பின் தொடர்ந்து கொண்டேயிருப்பேன்.

எழுதியவர் : சங்கீதாநிதுன் (12-Sep-11, 5:45 pm)
பார்வை : 281

மேலே