சிரிப்பு சுனாமி
மங்கையரில் மகாராணி
இவர்களில் யாரெனச் சொல்வது...
எல்லோரும் இளவரசிகளாய்த்
தோன்றும்போது...
மங்கையரின்
சிரிப்பு சுனாமி...
அடித்துச் செல்கிறது
பார்ப்பவரின் மனங்களை...
கடற்கரை நடுங்கித்தான் போனது...
சிரிப்பின் ரிக்டர் அளவு
வெகுவாய்க் கூடிப்போனதால்...
சுற்றுலா முடியாமல்
தொடரக் கூடாதா...
நினைக்கத் தோன்றுமோ
இவர்களுக்கு... இவர்களின்
சிரிப்பு சொல்கிறதே...
அதென்ன மாயம்...
சிரிப்பு ஏற்புத் திறன்
முழுமையும் தெரிகிறதே...
சிரிப்பது தெரிகிறது...
ஏனென்றுதான் தெரியவில்லை...
காலங்கள் பல ஆகினும்
ஏனென்று எப்போதும்
நினைவில் வரும் சிரிப்போ...
நல்ல வேளை...
வானத்து நட்சத்திரங்கள்
பார்க்கவில்லை குடைக்குள் இருந்த
இந்த நட்சத்திரங்களை...
இவர்களின் சிரிப்பு வெளிச்சத்தில்
தாம் தோற்றுப் போனதாய்
சோர்வடையக் கூடும்...
மாம்பழக் கலரில் ஆடைகள்
எனச் சொல்லியது போய்
இவர்கள் ஆடைகள் நிறத்தில்
மாம்பழங்கள் எனச் சொல்ல
வேண்டி வருமோ இனி...
சொல்லித்தான் ஆகவேண்டும்
போட்டோவும் அழகு...
அதை எடுத்தவரும்
அழகாய்த்தான் இருப்பார் என்று...
😀👏💐👍