அரவணைக்கும் அன்பு அக்கா
என்றுமே துணையாக
பிரியாத நிழலாக
என் வாழ்வின் அங்கமாக
ஒளிரும் எந்தன் தேவதையே ..!!!
இருள் கொண்ட இரவுகளில்
பயம் போர்த்திய நிசப்தங்களில்
உன் விரல் பிடித்து உறங்கிய தருணம்
மீண்டும் வாழ்வில் வந்துடுமா ???
விழியிலே வார்த்தைகள் கோர்த்து
சிரிப்பாலே இசை அமைத்து
எனக்காக பாடிய கீதங்கள்
மீண்டும் காதில் கேட்டிடுமா ???
ஒரு புறம் என் தாயாக
மறுபுறம் என் தோழியாக
வாழ்வில் என்றும் இருந்திட கேட்டால்
உடனே வரங்கள் தருவாயா ???
-தமிழ் தாயின் மகள்