காதல் சொல்ல வந்தேன்-23

காதல் சொல்ல வந்தேன்-23

ஏற்பாயா என்னை என்று ஏங்கிய
போதெல்லாம்

எனக்குள் ஒரு நம்பிக்கை நிச்சையம்
என்று

தயக்கத்தோடே உன் பின்னே அலைய

தயங்காது தவிற்காது அனுமதித்தாய்
ஆனாலும்

தள்ளிதானே நடந்தாய் நாம் மௌனித்தாலும்

காலம் தன் தயக்கத்தை கைவிட்டு திட்டமிட்டு நம்மை இணைத்தது

இன்னும் அந்தநாள் மட்டும் என் நினைவைவிட்டு அகலாது

என்னை பிடிச்சிருக்கா என்ற கேள்விக்கு நான் தந்த பதில்

தாமரைப்பாதம் தாங்கும் தண்ணீராய்
தாங்குவேன் உன்னை என்றேன்

அதன்பிறகு வார்த்தைகள் தேவையற்றுப்போனது

பெரும்பாலும் மௌனம்தான் நம்மை மாலையாய் கோர்த்தது

இன்றுவரை தொடர்கிறது நான் இருக்கும்வரை மாறாது

ஏன் என்றால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (16-Dec-19, 6:49 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 156

மேலே