முகவரி இழந்த வானம்

முல்லை சிரிக்கிறது
முள் சூழ்ந்த ரோஜாவும் சிரிக்கிறது
தோட்டத்திற்கு வந்த தென்றல் ஆச்சரியத்தில் ...

பூத்த புதுமலர்
புழுதியில் விழுகிறது
கண்ணீர் சிந்துகிறது பனித்துளிகள்...

ஏழு வண்ணங்களில்
எழிலுடன் வளைந்து நிற்கும் வானவில்
கலைந்த போது வருந்துகிறது நீலவானம் ...

பௌர்ணமியில் ஒளிர்ந்த முழுநிலவு
தேய்ந்து தேய்ந்து இல்லாமல் போனது ஓர் நாள்
இருள்வானம் முகவரி இழந்து நின்றது ...

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-19, 6:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 217

சிறந்த கவிதைகள்

மேலே