இறந்த மழலைகள் நினைவில்

என் ரோஜாச்செடியில்
வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சிகள்
அழகாய்த்தானிருந்தன..
மெதுவாய்
மிக மெதுவாய்
சிறகசைத்ததில் அதன்
மென்மையை உணர்ந்தேன்..
வண்ணத்துப்பூச்சிகளின் வருகையில்
பேரானந்தம் கொண்டு
வசப்படுத்திக்கொள்ள விரல் நீட்டினேன்..அவை
சுதந்திரமானவை என்பதனை அறியாமல்..
விரல்தான் உனது
வானே எனதென நழுவி
விருட்டெனப்பறந்தன
வண்ணத்துப்பூச்சிகள்..
செய்வதறியாது நிற்கிறேன்.

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (23-Dec-19, 10:10 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 442

மேலே