இறந்த மழலைகள் நினைவில்

நீலவான் அங்கே
வீழ்ந்துகொண்டிருக்கிறது..
விண்மீன்களோ
உதிரும் பூக்களாய்
பொழிந்துகொண்டிருக்கின்றன..
இருண்மையின் துவக்கப்புள்ளி
அந்த நிலவுக்குப்பின்னால்
உருவாகிவிட்டது..
இங்கே
ஒரு கூண்டு
திறந்துகிடக்கிறது..
வீழ்ந்துகொண்டிருக்கும் விண்மீன்களிடையே
இரு பறவைகள் செல்வதை
இறுதியாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (23-Dec-19, 9:50 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 202

மேலே