தாய்
இன்று பல இடத்தில் தான்
பெற்று பேணிக் காத்த ஆளாக்கிய
பிள்ளைகள் மூப்பில் தன்னை ஏனோ
காக்க மறந்து போகிறாரோ என்று
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்
தனக்குள்ளே தானே கண்ணீர்விடும் தாய்மார்கள்
ஐயகோ என்னென்பது இந்த கொடுமையை
ஆத்தா கண்ணீர்விட்டா அது அந்த
லோகமாத்தா கண்ணீர் விடு வதொக்கும்
பிள்ளைகளே அன்பு அன்னையைக் காக்க
மறவாதீர் ஒரு நாளும் அவள்
தெய்வம் , தெய்வம் கண்ணீர்விட்டால் அது
சாபம் என்று அறி