மறக்கவே நினைக்கிறன்

ஒரு உண்மைக்கும் பொய்க்குமான
உயிர் உள்ள சாட்சியாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
நம் காதல் பிரிவின் வலி
சில வீணான சந்தேகங்களுக்கும்
அவசியமான புரிதல்களுக்குமான
எஞ்சிய வடுகளாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
நம் எச்சில் முத்தங்கள்
அர்த்தமற்ற விவாதங்களுக்கும்
உளப்பூர்வமான அணைப்பிற்குமான
நீள் தொடர்ச்சியாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
நம் கலையாத மௌனம்
பல நெடுநேர காத்திருப்புகளுக்கும்
சிறு சிறு சிநேக புன்னகைகளுக்குமான
கண்சிமிட்டும் தீபமாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
நம் உறக்கமற்ற இரவுகள்
வேண்டாத விருப்பங்களுக்கும்
கண்டு களித்த காட்சிகளுக்குமான
பிரதிபிம்பமாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
நம் உணர்ச்சி தேகங்கள்
எதிர்பார்க்கும் சமாதானத்திற்கும்
எதிர்பார்க்கின்ற எதிர்காலத்திற்கும்
வண்ண வானவில்லாய்
இருந்துவிட்டுப்போகட்டுமே
மழையில் நனைந்து மெல்ல
துடிக்க தொடங்கிடும் நம் இதயங்கள்!!!