அவளுக்காக நான்

முகம் மறந்தேன்!
என்னை முழுவதும் மறந்தேன்!
இமைக்கும் ஒவ்வொரு வினாடியும் உந்தன்
முகம்தானடி!
உன் வழிப் பாதை யாவும்
பூக்கள் தூவிக் காத்திருந்தேன்!
உன் விழிப் பார்வையில்
என்னை நான் தொலைத்தேன்!
என்னவளே!
எனக்கானவளே!
ஏக்கத்ததோடு காத்திருக்கிறேன்!
உன் அன்பில் நனையக் காத்திருக்கிறேனடி!
என் உயிரும், உள்ளமும் நீதானடி!
புன்னகைப் பூவே!
உந்தன் கரம் பிடிக்கும் நாளை எண்ணி
என் நாட்களும் நகருதடி!

எழுதியவர் : உஷாராணி (1-Jan-20, 10:28 pm)
Tanglish : avalukkaka naan
பார்வை : 558

மேலே