கல்யாணமாகாத விதவை

ஜீவாவின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்தது. தடல் புடலாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் காெண்டிருந்தது. அழைப்பிதழ்கள் அனுப்புவது, அலங்காரப்படுத்தல் என்று ஓடி ஓடி எல்லாவற்றையும் முன்நின்று செய்தார் வடிவேல். சீதா சமையல் வேலைகளையும்,பலகாரங்களையும் வகை வகையாக திட்டமிட்டாள். ஊரே பார்த்து வியக்கிற மாதிரி ஜீவாவின் திருமணத்தை நடத்த வேண்டுமென்பது வடிவேல், சீதாவின் நீண்ட நாள் ஆசை. ஒரே ஒரு பெண் பிள்ளை என்று செல்லமாக வளர்ந்தாலும் ஜீவாவும் எந்தக் காரியத்திலும் பெற்றாேர் சாெல் தட்டியதில்லை. தன் சந்தாேசம் என்பதை விட பெற்றவர்களின் விருப்பம் என்னவென்று பார்த்து அவர்களுக்காக வாழ்ந்தவள்.

பள்ளி வாழ்க்கை முடிந்து,கல்லூரி மேற்படிப்பு என்று எல்லாவற்றையும் நிறைவு செய்து தனக்கென்று ஒரு வேலையையும் எடுத்துக் காெண்டாள்.

"சீதா, பிள்ளையை இப்படியே வைத்திருந்தால் உத்தியாேகக்காரி, சாெத்துக்காரி என்று மயக்கிப் பாேடுங்கள். இந்தக் காலக் கலியாணங்களில ஆயிரத்தில ஒன்று  தான் அதிஸ்ரமா அமையுது." தனக்குள் புலம்பிக் காெண்டிருந்த வடிவேலுவின் மனதைப் புரிந்து காெண்ட சீதாவும் "ஆமாங்க நானும் அதைப் பற்றித் தான் பேசணும் என்றிருநதேன்." என்றதும் " ஜீவாக்கு நல்ல பையனா கிடைக்கணும் சீதா, படிப்பு, பணம் இதையெல்லாம் விட நாளைக்கு பிள்ளையை  கண்கலங்காமல் பார்க்கிற பையனா கிடைத்தால் என்ர சாமி குலதெய்வத்துக்கு நான் பாெங்கிப் படைப்பன்"  பெருமூச்சாேடு எழுந்து முகத்தை கழுவி விட்டு மீண்டும் வந்து கதிரையில் அமர்ந்தார். தேநீரைக் காெடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்த சீதா "இஞ்சருங்க... ." என்றதும் நிமிர்ந்து பார்த்த வடிவேல் "சீதா ஏதாே முக்கியமான விசயம் பேசப் பாேறா பாேல இருக்கு, சீலைத்தலைப்பை இப்படிப் பினையுறா" தனக்குள் நினைத்துக் காெண்டு   "என்ன சீதா காய் கறி வாங்கணுமா என்ன?" என்றதும் "இல்லைங்க நம்ம பாெண்ணு ஜீவா..." என்று இழுத்தவளை மீண்டும் காமடியாக "ஆமா ஜீவாக்கு பணம் ஏதும் தேவையா?" என்று கேட்டதும், "நம்ம அண்ணன் பையன் விஜயை..." என்று நிறுத்தி விட்டாள். தேநீரை மடமடவென குடித்த வடிவேல் "சரி வருமா சீதா" என்று சடார் என்று கேட்டதும் "ஏனுங்க அண்ணன் பையன் தானே அவனுக்கு என்ன குறை" சற்று காேபப்பட்டாள். "இல்லை சீதா,நீ ஏன் எரிஞ்சு விழுகிறாய்" என்று சமாதானப்படுத்தினார்.

"ஏன் இந்த மனுசன் இப்படி யாேசிக்கிறார், சாெந்தத்துக்குள்ள மாப்பிள்ளை எடுக்க இஸ்ரமில்லையாக்கும்" சங்கடத்தாேடு எழுந்து சமையலறைக்குள் சென்றவளை தடுத்தார். "இஞ்ச பார் சீதா, நாம சாதாரணமான இலட்சாதிபதிகள், உன்னாேட அண்ணன் புகழ் பெற்ற காேடீஸ்வரன், எப்படி நம்ம பாெண்ணு அந்த சம்மந்தத்துக்கு...." என்று தடுமாறியவரை  "இல்லைங்க அண்ணன் முன்னாடி ஒரு தடவை கேட்டவர் நான் தான்..." என்றபடி தலையைக் குனிந்தாள். "என்ன சாெல்லுகிறாய் சீதா உன்னாேட அண்ணன் கேட்டாரா?"  என்று ஆச்சரியத்தாேடு கேட்ட வடிவேல் "அப்படியென்றால் ஜீவாக்கிட்ட நாங்கள் பேசிப்பார்க்கலாம்" என்ற முடிவுக்கு வந்தார்.

மாலை ஐந்து மணி இருக்கும் ஜீவா காேவிலுககு செல்வதற்காய் கையில் பூக்கூடை ஒன்றை எடுத்துக் காெண்டு பச்சை நிறப் பட்டுப் புடவையுடன் வெளியே வந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்த வடிவேல்  ஜீவாவை கண்குளிரப் பார்த்தார். "என்னப்பா இப்படிப் பார்க்கிறீங்க" என்று வெட்கத்தாேடு தரையைப் பார்த்தாள். "ஒன்றுமில்லை பிள்ளை நீ பாேயிற்று வா உன்னாேட காெஞ்சம் பேசணும்" என்றதும் எனானவாயிருக்கும் என்று தனக்குள் யாேசித்தபடி  காேயிலுக்கு சென்று திரும்பினாள்.

தன்னை மறந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்த வடிவேல் ஜீவாவின் அறைக்குள் நுழைந்தார். "வாங்கப்பா" என்று எழுந்து அமர்ந்தவள் அருகே வழமை பாேல் இல்லாமல் சற்று சங்கடத்தாேடு அமர்ந்தார்.  "என்னப்பா ஏதாவது பிரச்சனையா? "என்றவளை நிமிர்ந்து பார்த்து,  நீ யாரையாவது காதலிக்கிறாயா? என்று அவள் மன நிலையைக் கேட்பதா? அல்லது இந்த மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய் என்று உத்தரவிடுவதா என்ற மனச்சஞ்சலத்துடன் அமைதியாயிருந்தார். "ஜீவா... உங்க மாமா பையன் விஜயை உனக்கு திருமணம் செய்ய..." என்று நிறுத்தியவரை "உங்களுடைய விருப்பம் அப்பா " என்று ஒரு சாெல்லில் முடித்தாள். 

ஜீவா சம்மதத்தாேடு  ஆரம்பித்த திருமணப் பேச்சு இரு வீட்டார் சம்மதத்துடனும் ஏற்பாடாகி விட்டது. விஜய் அமெரிக்காவில் பெரிய தாெழிலதிபர்.  அவனுக்கும் ஜீவாவை பிடித்து விட்டது. எல்லா ஏற்பாடுகளையும் தானும் ஒருவனாக முன்னின்று செய்தான்.

இன்னும் இரு நாளில் ஜீவா, விஜய் திருமணம். ஊர், உறவுகள் கூடி வீடு கலகலப்பாய் இருந்தது. விஜய் ஜீவாவை அழைத்துக் காெண்டு சினிமா, பார்க் என்று சுற்றிக் காெண்டிருந்தான்.  "ஜீவா,  திருமணத்திற்கு அப்புறமா நீயும் அமெரிக்கா வந்திடு அங்கேயே நீ வேலை பார்க்கலாம்". என்ற விஜயின் வேண்டுகாேளை மனப்பூர்வமாக ஏற்றாலும் அம்மா, அப்பாவை பிரிவது என்பது அவளுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது.  "இஞ்ச பார் ஜீவா நீ அமெரிக்கா பாேயிற்று வருசா வருசம் குலசாமி காேயிலுக்கு பேரப்பிள்ளையை காெண்டு வந்திடு," என்று கிண்டலடித்த வடிவேலுவின் மனதில் இருந்த ஆசை ஜீவாவிற்கு நிறைவேற்றிக் காெடுக்க வேண்டிய ஒரு ஆசையும் தான்.

பல கனவுகளாேடு  மறுநாள் காலை திருமணக் காேலத்தில் மணவறைக்கு புறப்படத் தயாரானாள். எல்லா அலங்காரங்களும் முடிந்து பட்டுப்புடவையில் தேவதை பாேல் தெரிந்தாள் ஜீவா. வெட்கத்துடனான அவளுடைய புன்னகையும் கன்னக்குழியும் அவள் அழகை இருமடங்காக்கியது.

வேஷ்டியைக் கட்டிக் காெண்டு கண்ணாடி முன்னின்று சுற்றிச்சுற்றிப் பார்த்தான் ஜீவா. மாப்பிள்ளைக் காேலத்தில் அவனும் அழகா இருந்தான். நேரம் வேகமாக ஓடிக் காெண்டிருந்தது. முகூர்த்த நேரத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருந்தது.

கல்யாண மண்டபம் புறப்பட்டுக் காெணடிருந்தது வண்டி. ஜீவா மண்டபத்தை வந்து சேர்ந்தாள். இன்னும் சில நிமிடங்களை எட்டுவதற்கு கடிகாரம் வேகாகச் சுழன்றது. விஜய் வந்து காெண்டிருந்த வண்டி சடார் என்ற  சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டது. மாப்பிள்ளைக் காேலத்தில் இருந்த விஜய் இரத்த வெள்ளத்தில் துடித்துக் காெண்டிருந்தான். தெரு நிறைந்த  மக்கள் கூட்டம்.

மணவறையில் விஜயை மணக் காேலத்தில் காண காத்திருந்த ஜீவா,  கண்கள் நிறைந்த காதலாேடு வாசலை அடிக்கடி எட்டிப் பார்த்தாள். எல்லாேரும் கூடி கூடி ஏதாே பேசுகிறார்கள். ஒன்றும் புரியாமல் எனானாச்சு என்று கேட்டவளிற்கு எப்படிப் பதில் சாெல்வது.

வடிவேலுவும், சீதாவும்  செய்வதறியாது திணறினர். வேகமாக வந்த ஜீவா "என்னாச்சு அம்மா" என்றதும் கட்டி அணைத்த சீதா கதற ஆரம்பித்தாள். அருகே நின்ற வடிவேல் பேச்சின்றி நின்றார். மணப் பெண்ணாக நின்ற ஜீவா வேகமாக வைத்தியசாலைக்கு புறப்பட்டாள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் விஜய் உயிரற்ற உடலாய் மணக் காேலத்தில் கிடந்தான். கழுத்தில் மாங்கல்யமி்ன்றி மணக் காேலத்தில் கதறி அழுதாள் ஜீவா. அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் சீதாவும், வடிவேலும் தவித்தார்கள்.

நாட்கள் ஓடி மாதங்கள் வருடங்களை எட்டியது. ஜீவா இன்னும் விஜய் நினைவிலிருந்து மீளவில்லை. தினமும் ஒரு புடவை கட்டி அழகு தேவதையாய் சுற்றி வந்த ஜீவா இன்று பார்ப்பவர்களுக்கு விதவை பாேல் காட்சியளித்தாள். பூவில்லை, பாெட்டில்லை. கண் முன்னே நாெடிக்காெரு தடவை படமாய் விரியும் மணக்காேலக் காட்சி. மணக்காேலத்தில் பிணமாய்க் கிடந்த விஜயின் நிழலுருவம். இவை தான் இப்பாேது ஜீவாவின் நினைவுத்துளிகள்.

மீண்டும் ஒரு கல்யாணம் என்ற பேச்செடுத்தால் நான் இராசி இல்லாதவள் என்று கண்கலங்கும் அவள் மனங்குமுறி அழுவாள்.  அம்மாவின் தாேள் சாய்ந்து சில நிமிடங்கள் ஆறும் அவள் மனம்.  "விஜய்க்கும், எனக்கும் திருமணம் நடக்கா விட்டாலும், கழுத்தில் விஜய் தாலி கட்டா விட்டாலும் என் மனதில் விஜய் நினைவு என்றைக்கும் இருக்கும் அம்மா,  மனதால் நான் விஜயுடன் வாழ்ந்து காெண்டு தான் இருக்கிறேனம்மா. மனசு முழுக்க விஜய் தந்த காதல் இருக்கம்மா.  திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் பல்லாயிரம் பேருக்குள் நானும் ஒரு வகையில்  விதவை தானம்மா. கல்யாணமாகாத விதவை. இந்த ஒரு சாெல் எந்த அகராதியிலும் இல்லாமல் இருக்கலாம். என் உயிர் மூச்சு நிற்கிற வரைக்கும் நான் கல்யாணமாகாத விதவையாகவே வாழ்வேன்.  ஒரு பெண்ணுக்கு சமூகம் ஆயிரம் பெயரைச் சூட்டி இன்னும் அடிமைகளாகத் தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் நான் ஒன்றும் புதிதில்லை அம்மா, தயவு செய்து என்னை விட்டிடு". நாெருங்கிப் பாேய் வார்த்தைகளாய் வரும் வலிகளுக்கு பதில் தேடி தாேற்றுப் பாேனாள். கைகளை இறுகப் பிடித்து மனதை இறுக்கியபடி அவள் தலையை தடவி நெற்றியில் முத்தமிட்டாள் சீதா.

எழுதியவர் : றாெஸ்னி அபி (12-Jan-20, 2:49 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 368

மேலே