மனிதன் மட்டும்

சின்னஞ் சிறிய பறவைமுதல்
சிறப்பாய் விளங்கும் மனிதன்வரை,
அன்னையின் அன்பு மாறுவதிலை
அதற்கிணை உலகில் எதுவுமில்லை,
சின்னக் குரங்கை மடிசுமக்கும்
சிறந்த பாசக் குரங்கினத்தின்
பின்னால் வந்த மனிதனவன்
பிழைதான் முதியோர் இல்லமதே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Jan-20, 7:51 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : manithan mattum
பார்வை : 80

மேலே