என்ன கண்டோம்

==================
தேர்வடத்தை இழுப்பதற்கு தெருவினிலே ஒன்றிணைந்தார்
-தெய்வத்தின் அருள்பெற்றுத் திரும்பக் கண்டோம்
வேர்விட்டக் கன்றுக்கு விருப்போடு நீர்வார்க்க
-விரைந்தோங்கி நிழல்தரவோர் விருட்சம் கண்டோம்
கார்முகிலும் கூடுமெனில் காற்றடிக்க மழையாகி
-கழனியெலாம் பசுமைமயம் கண்டோம் கண்டோம்
ஊர்வலங்கள் பொதுக்கூட்டம் ஊருக்குள்ளே நடத்துகின்ற
-உதவாதக் கட்சிகளால் உலகிலென்ன கண்டோம்?
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jan-20, 2:12 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 122

மேலே