ஊடல் கொண்ட தருணம்

நானெல்லாம் அவனாகி என்னை மறந்து நான் இருக்க
அவன் என்னை மறுத்து இருந்தால் என் இதயம் கண்ணீராய் உதிரம் உதிர்காதா

அவன் சுவாசத்தில் வாழ்ந்த என்னை தள்ளி வைத்தால் என் உயிரும் உருகாதா

தொட்டு அணைத்து என்னை தாலாட்டும் அவன் கரங்கள் இன்று தீண்டாது இருந்தால்
தூங்காது என் தேகம் தீயாய் எரியாதா

கொண்ட ஊடல் எல்லாம் உளி போல் என்னை தாக்கினாலும்
சிற்பம் போல என் காதல் உரு பெறும் என்ற நம்பிக்கையில் நான்....

எழுதியவர் : ரேவதி (18-Feb-20, 10:43 pm)
சேர்த்தது : ரேவதி
பார்வை : 93

மேலே